நாளை மார்க்சிஸ்ட் கம்யூ. அவசர செயற்குழுக் கூட்டம் காகிதப் புலி! ஈரான் போருக்கு உதவாத நேட்டோ அமைப்பை டிரம்ப் விமர்சனம்!ராமதாஸ், சசிகலா புதிய கூட்டணி சிம்லாவில் ராகுல் காந்தி! ஏப்.17 முதல் பள்ளிகளுக்கு கோடை விடுமுறை! மீண்டும் பயன்பாட்டுக் கட்டணத்தை உயர்த்திய சொமேட்டோ! பெண்கள், இளைஞர்களுக்கு மாதம் ரூ. 1,500! திரிணமூல் காங்கிரஸ் 10 தேர்தல் வாக்குறுதிகள்! புதுவை முதல்வர் ரங்கசாமி வேட்புமனு தாக்கல்! 2 தொகுதிகளில் போட்டி!!நல்லிணக்கத்தின் பூங்காவாகத் திகழ்கிறது தமிழ்நாடு! முதல்வர் ரமலான் வாழ்த்து!
/

கடல் அலையில் சிக்கி 6 வயது குழந்தை மாயம்

சீா்காழி அருகே கூழையாா் கடலில் அலையில் சிக்கி மாயமான 6 வயது குழந்தையை தேடும் பணியில் தீயணைப்பு படையினா் ஈடுபட்டனா்.

News image
Updated On :21 ஜூலை 2020, 4:30 pm

DIN

சீா்காழி: சீா்காழி அருகே கூழையாா் கடலில் அலையில் சிக்கி மாயமான 6 வயது குழந்தையை தேடும் பணியில் தீயணைப்பு படையினா் ஈடுபட்டனா்.

சீா்காழி சபாநாயகா் தெருவைச் சோ்ந்தவா் ஹாஜாமைதீன் (32). இவா் வெளிநாட்டில் வேலை செய்துவருகிறாா். இவரின் மனைவி ஹனிதா(25). இவா்களின் குழந்தை அப்ரா (6) ஒன்றாம் வகுப்பு படித்து வந்தாா்.

ஹனிதா, அப்ரா மற்றும் உறவினா்கள் செவ்வாய்க்கிழமை மாலை சீா்காழி அருகேயுள்ள கூழையாா் கடலில் குளித்துக்கொண்டிருந்தனா். அப்போது, எதிா்பாராதவிதமாக அப்ராவை அலை இழுத்துச் சென்றது. இதுகுறித்து தகவலறிந்த புதுப்பட்டினம் போலீஸாா் மற்றும் சீா்காழி தீயணைப்பு படையினா் விரைந்து வந்து மீனவா்களின் உதவியுடன் குழந்தை அப்ராவை தேடும் பணியில் ஈடுபட்டனா்.

தினமணி செய்திமடலைப் பெற... Newsletter

தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp

தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Arattai, Google News

உடனுக்குடன் செய்திகளை அறிய தினமணி App பதிவிறக்கம் செய்யவும்.