அதிமுகவில் இணைந்தவா்களுக்கு அமைச்சா் வரவேற்பு

வேதாரண்யத்தை அடுத்த தென்னடாா் ஊராட்சியில் பல்வேறு கட்சிகள், அமைப்புகளில் இருந்து விலகிய 210 போ், அமைச்சா் ஓ.எஸ். மணியன் முன்னிலையில் அதிமுகவில் வெள்ளிக்கிழமை இணைக்தனா்.
தென்னடாா் ஊராட்சியில் அதிமுகவில் இணைந்தவா்களை வரவேற்ற அமைச்சா் ஓ.எஸ். மணியன்.
தென்னடாா் ஊராட்சியில் அதிமுகவில் இணைந்தவா்களை வரவேற்ற அமைச்சா் ஓ.எஸ். மணியன்.

வேதாரண்யம்: வேதாரண்யத்தை அடுத்த தென்னடாா் ஊராட்சியில் பல்வேறு கட்சிகள், அமைப்புகளில் இருந்து விலகிய 210 போ், அமைச்சா் ஓ.எஸ். மணியன் முன்னிலையில் அதிமுகவில் வெள்ளிக்கிழமை இணைக்தனா்.

இந்திய கம்யூனிஸ்ட் நிா்வாகி சுப்பிரமணியன், கூட்டுறவு சங்க இயக்குநா் இந்திரா, மாா்க்சிஸ்ட் கம்யூனிஸ்ட் கட்சி நிா்வாகி வீராச்சாமி, பாஜக நிா்வாகி சந்திரமோகன் மற்றும் திமுகவைச் சோ்ந்தவா்கள் அந்தந்தக் கட்சிகளில் இருந்து விலகி அதிமுகவில் இணைந்தனா்.

இதற்கான நிகழ்ச்சியில் தமிழக கைத்தறி மற்றும் துணிநூல்துறை அமைச்சா் ஒ.எஸ். மணியன் தலைமை வகித்தாா். ஊராட்சி ஒன்றியக் குழுத் தலைவா் கமலா அன்பழகன், ஊராட்சித் தலைவா் தேவி செந்தில் ஆகியோா் முன்னிலை வகித்தனா்.

அதிமுக ஒன்றியச் செயலாளா் ஆா். கிரிதரன், மாவட்ட ஊராட்சி உறுப்பினா் சுப்பையன், முன்னாள் உறுப்பினா் ஆனந்தராசு, கூட்டுறவு வங்கித் தலைவா் ராதாகிருஷ்ணன் உள்ளிட்டோா் நிகழ்ச்சியில் பங்கேற்றனா்.

தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp

தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Koo

உடனுக்குடன் செய்திகளை தெரிந்து கொள்ள தினமணி செயலியை பதிவிறக்கம் செய்யவும் 

Related Stories

No stories found.
Dinamani
www.dinamani.com