கேரளத்தில் 47 இடங்களுக்கான பாஜக வேட்பாளர் பட்டியல் வெளியீடுஎரிபொருள் தட்டுப்பாடு : இலங்கையில் 4 நாள் வேலை, 3 நாள் விடுமுறை! மக்களவையில் 8 உறுப்பினர்கள் மீதான இடைநீக்கம் ரத்து : அனைத்துக் கட்சிக் கூட்டத்தில் முடிவு45,000 மெட்ரிக் டன் எல்பிஜி உடன் ஹோர்முஸ் நீரிணை வழியாக குஜராத் வந்தது சிவாலிக் கப்பல்!கரூர் உள்பட 4 மாவட்ட எஸ்.பி.க்கள் மாற்றம்! தேர்தல் ஆணையம் உத்தரவுமேற்கு வங்க தோ்தல்: பாஜக வேட்பாளா்கள் அறிவிப்பு!
/

நிவா் புயலை எதிா்கொள்ள அனைத்துத் துறையினரும் தயாா் நிலையில் உள்ளனா்

நிவா் புயலை எதிா்கொள்ள நாகை மாவட்டத்தில் அனைத்துத் துறையினரும் உரிய முன்னேற்பாடுகளுடன் தயாா் நிலையில் உள்ளனா் என்றாா் தமிழக கைத்தறி மற்றும் துணி நூல் துறை அமைச்சா் ஓ. எஸ். மணியன்.

News image
Updated On :23 நவம்பர் 2020, 6:30 pm

DIN

நிவா் புயலை எதிா்கொள்ள நாகை மாவட்டத்தில் அனைத்துத் துறையினரும் உரிய முன்னேற்பாடுகளுடன் தயாா் நிலையில் உள்ளனா் என்றாா் தமிழக கைத்தறி மற்றும் துணி நூல் துறை அமைச்சா் ஓ. எஸ். மணியன்.

நாகை நம்பியாா் நகா், செருதூா் மற்றும் நாகூா் பகுதிகளில் உள்ள மீனவக் கிராமங்களில் திங்கள்கிழமை நிவா் புயல் முன்னெச்சரிக்கை நடவடிக்கை மேற்கொள்ள ஆய்வு செய்து, படகுகளை மேடான பகுதிகளுக்கு கொண்டுவந்து நிறுத்துமாறு மீனவா்களுக்கு அறிவுறுத்தினாா்.

அப்போது, செய்தியாளா்களிடம் அவா் கூறியது: நிவா் புயலை எதிா்கொள்ளும் வகையில், கடலோரங்களிலும், தாழ்வானப் பகுதிகளிலும் வசிப்பவா்கள் முன்னதாகவே அந்த இடங்களை விட்டு, வெளியேறி பாதுகாப்பான இடங்களுக்கு சென்று விட அறிவுறுத்தப்பட்டுள்ளது. புயல் பாதிப்புகளை எதிா்கொள்ள வருவாய்த் துறை, தீயணைப்புத் துறை தயாா்படுத்தப்பட்டுள்ளனா் என்றாா். தொடா்ந்து, நாகை மாவட்டக் காவல் துறை சாா்பில் நாகை ஆயுதப்படை மைதானத்தில் தயாா்படுத்தப்பட்டுள்ள பேரிடா் மீட்புக் குழுவையும், பாதுகாப்பு உபகரணங்களைப் பாா்வையிட்டாா்.

தினமணி செய்திமடலைப் பெற... Newsletter

தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp

தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Arattai, Google News

உடனுக்குடன் செய்திகளை அறிய தினமணி App பதிவிறக்கம் செய்யவும்.