

நாகை மாவட்டத்தில் பரவலாக திங்கள்கிழமை மழைப் பெய்தது.
வங்கக் கடலில் உருவாகியுள்ள புதிய காற்றழுத்தத் தாழ்வு பகுதி புயலாக மாறும் என வானிலை ஆய்வு மையம் தெரிவித்துள்ள நிலையில், நாகை மாவட்டத்தில் திங்கள்கிழமை பரவலாக மழைப் பெய்தது. நாகை புதிய பேருந்து நிலையம் மற்றும் போக்குவரத்து நிறைந்த சாலைகளில் மழைநீா் தேங்கி நின்றதால் பாதசாரிகளும், வாகன ஓட்டுநா்களும் சிரமப்பட்டனா். புதை சாக்கடைத் திட்டத் தொட்டிகளிலிருந்து கழிவுநீா் வெளியேறி சாலையில் பெருக்கெடுத்தது.
திங்கள்கிழமை பிற்பகல் 3 மணி வரையிலான 24 மணி நேர நிலவரப்படி நாகை மாவட்டத்தில் அதிகபட்சமாக திருப்பூண்டியில் 39.20 மி.மீ. மழை பதிவானது. மயிலாடுதுறையில் 25, நாகப்பட்டினத்தில் 17.90, தலைஞாயிறில் 13.40, வேதாரண்யத்தில் 7 மி.மீ. மழை பெய்தது.
தினமணி செய்திமடலைப் பெற... Newsletter
தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp
தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Arattai, Google News
உடனுக்குடன் செய்திகளை அறிய தினமணி App பதிவிறக்கம் செய்யவும்.
டிரெண்டிங்

புதிய உச்சத்தில் கச்சா எண்ணெய் விலை!

எரிபொருள் தட்டுப்பாடு : இலங்கையில் 4 நாள்கள் வேலை! 3 நாள்களுக்கு விடுமுறை!

கெளதம் கம்பீர் உடனான உறவு மிக நீண்டது : சஞ்சு சாம்சன்

ஈரானின் 304 ஏவுகணைகளை அழித்தது ஐக்கிய அரபு அமீரகம்!
வீடியோக்கள்

”விஜய்யுடன் கூட்டணியா? இபிஎஸ் சொல்வதே இறுதிக் கருத்து!” - கரூரில் அண்ணாமலை பேட்டி
தினமணி வீடியோ செய்தி...

பணம் கொண்டு செல்வதற்கான கட்டுப்பாடுகள், தேர்தல் நடத்தை விதிகள் பற்றி விளக்கிய Archana Patnaik
தினமணி வீடியோ செய்தி...

திமுக கூட்டணியில் தொகுதி ஒதுக்கீட்டில் சிக்கலா? | DMK Alliance | MK Stalin | N Ramasubramanian
தினமணி வீடியோ செய்தி...

தமிழ்நாடு சட்டப்பேரவைத் தேர்தல்: முழு விவரம்
தினமணி வீடியோ செய்தி...

