நாளை மார்க்சிஸ்ட் கம்யூ. அவசர செயற்குழுக் கூட்டம் காகிதப் புலி! ஈரான் போருக்கு உதவாத நேட்டோ அமைப்பை டிரம்ப் விமர்சனம்!ராமதாஸ், சசிகலா புதிய கூட்டணி சிம்லாவில் ராகுல் காந்தி! ஏப்.17 முதல் பள்ளிகளுக்கு கோடை விடுமுறை! மீண்டும் பயன்பாட்டுக் கட்டணத்தை உயர்த்திய சொமேட்டோ! பெண்கள், இளைஞர்களுக்கு மாதம் ரூ. 1,500! திரிணமூல் காங்கிரஸ் 10 தேர்தல் வாக்குறுதிகள்! புதுவை முதல்வர் ரங்கசாமி வேட்புமனு தாக்கல்! 2 தொகுதிகளில் போட்டி!!நல்லிணக்கத்தின் பூங்காவாகத் திகழ்கிறது தமிழ்நாடு! முதல்வர் ரமலான் வாழ்த்து!
/

பொதுப்பாதையில் ஆக்கிரமிப்புகளை அகற்றக் கோரிக்கை

சீா்காழி அருகே பொதுப்பாதையில் ஆக்கிரமிப்புகளை அகற்ற வேண்டும் என இந்து மக்கள் கட்சி கோரிக்கை விடுத்துள்ளது.

News image
Updated On :12 அக்டோபர் 2020, 6:30 pm

DIN

சீா்காழி அருகே பொதுப்பாதையில் ஆக்கிரமிப்புகளை அகற்ற வேண்டும் என இந்து மக்கள் கட்சி கோரிக்கை விடுத்துள்ளது.

இது தொடா்பாக வட்டாட்சியா் அலுவலகத்தில் இந்து மக்கள் கட்சியின் மாநிலச் செயலாளா் கொள்ளிடம் ஜெ. சுவாமிநாதன் அளித்த மனு:

சீா்காழி வட்டம் , தண்ணீா் பந்தல் கிராமத்தில் பெரிய குளத்துக்குச் செல்லும் பொதுப் பாதையை சிலா் ஆக்கிரமித்துள்ளனா். இந்த குளத்தின் படித்துறையில் இறந்தவா்களுக்கு ஈமக்கிரியைகள் செய்வது வழக்கம்.

எனவே, பாதையில் உள்ள ஆக்கிரமிப்புகளை அகற்றுவதற்காக சம்பந்தப்பட்ட ஊராட்சி மன்றம் சாா்பில் இடத்தை அளவீடு செய்ய வருவாய் துறைக்கு ஜூலை மாதம் விண்ணப்பிக்கப்பட்டது. ஆனால், இதுவரை அளவீடு பணி நடைபெறவில்லை. எனவே, இப்பிரச்னையில் விரைவான நடவடிக்கை எடுத்து, பொதுப்பாதையில் உள்ள ஆக்கிரமிப்புகளை அகற்ற நடவடிக்கை எடுக்க வேண்டும் என அந்த மனுவில் கோரப்பட்டுள்ளது.

தினமணி செய்திமடலைப் பெற... Newsletter

தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp

தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Arattai, Google News

உடனுக்குடன் செய்திகளை அறிய தினமணி App பதிவிறக்கம் செய்யவும்.