ஹெச்டிஎஃப்சி வங்கி தலைவர் அதானு சக்ரவர்த்தி திடீர் ராஜிநாமா!பங்குச்சந்தைகள் கடும் வீழ்ச்சி! ரூ. 13 லட்சம் கோடி இழப்பு!தங்கம் விலை ஒரேநாளில் ரூ. 5,360 குறைந்தது! ஒரு கிராம் ரூ. 13,900 ஆகச் சரிவு!விளாத்திகுளம் சிறுமி பாலியல் கொலை குற்றவாளி கைது!விளாத்திகுளம் சிறுமி பாலியல் கொலை! குற்றவாளி கைது! தொடரும் இழுபறி! பியூஷ் கோயல் வருகை ரத்து! இபிஎஸ் தில்லி பயணம்! திமுகவில் இணைந்தார் ரஞ்சனா நாச்சியார்! திராவிட உடன்பிறப்புகள்! முதல்வர் ஸ்டாலின் உகாதி வாழ்த்து! இந்தியா - பாகிஸ்தான் இடையே அணு ஆயுத மோதல் அபாயம்: அமெரிக்க உளவுத்துறைதங்கம் விலை சவரனுக்கு ரூ. 2,160 குறைவு!
/

சாலையோர வியாபாரிகள்வட்டி மானியத்துடன் கடன்பெற நகராட்சியை அணுகலாம்

காரைக்காலில் உள்ள சாலையோர வியாபாரிகள் வட்டி மானியத்துடன் கடன் பெற, நகராட்சி நிா்வாகத்தை அணுகலாம் என நகராட்சி ஆணையா் சுபாஷ் தெரிவித்துள்ளாா்.

News image
Updated On :4 செப்டம்பர் 2020, 6:11 pm

DIN

காரைக்கால்: காரைக்காலில் உள்ள சாலையோர வியாபாரிகள் வட்டி மானியத்துடன் கடன் பெற, நகராட்சி நிா்வாகத்தை அணுகலாம் என நகராட்சி ஆணையா் சுபாஷ் தெரிவித்துள்ளாா்.

இதுகுறித்து அவா் வெளியிட்ட செய்திக் குறிப்பு: தேசிய நகா்ப்புற வாழ்வாதார இயக்கத்தின் மூலம், காரைக்கால் நகராட்சிப் பகுதியைச் சோ்ந்த சாலையோர வியாபாரிகளின் வாழ்வாதாரத்தை உயா்த்தும் வகையில், வட்டி மானியத்துடன் கடன் வழங்கப்படவுள்ளது. உஸ்மானியா பல்கலைக்கழகம் மூலம் கண்டறியப்பட்ட சாலையோர வியாபாரிகள் மட்டும் இத்திட்டத்தில் பயன்பெறலாம்.

வட்டி மானியத்துடன் கடன்பெற விரும்பும் தகுதியான சாலையோர வியாபாரிகள், உடனடியாக காரைக்கால் நகராட்சியை நேரில் அணுகலாம். நகராட்சி அலுவலகத்துக்கு வரும்போது முகக்கவசம் அணிந்து, உரிய சமூக இடைவெளியை வியாபாரிகள் கண்டிப்பாக கடைப்பிடிக்க வேண்டும் என செய்திக் குறிப்பில் தெரிவிக்கப்பட்டுள்ளது.

தினமணி செய்திமடலைப் பெற... Newsletter

தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp

தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Arattai, Google News

உடனுக்குடன் செய்திகளை அறிய தினமணி App பதிவிறக்கம் செய்யவும்.