மேற்காசியா, வளைகுடாவில் போர்ச் சூழல் - இந்தியாவின் முட்டை ஏற்றுமதி முடக்கம்தமிழ்நாடு காங். கமிட்டி தலைவர் செல்வப்பெருந்தகையின் மகள் நிச்சயதார்த்த விழாவில் முதல்வர் மு.க.ஸ்டாலின் பங்கேற்புவேளச்சேரி - பரங்கிமலை பறக்கும் ரயில் வழித்தடத்தில் மார்ச் 5 சோதனை ஓட்டம்திருமலையில் சந்திர கிரகணத்துக்குப்பின் மீண்டும் நடை திறப்பு: பக்தர்களுக்கு அனுமதி!மாநிலங்களவைத் தேர்தலில் தேமுதிகவுக்கு 1 இடம் ஒதுக்கீடு: திமுகவுடன் சுமூக உடன்பாடுமாநிலங்களவை உறுப்பினர் பதவிக்கு பாஜக தலைவர் நிதின் நவீன் போட்டி! இந்தியாவில் 25 நாள்களுக்கான கச்சா எண்ணெய், பெட்ரோல், டீசல் இருப்பு!மேற்கு ஆசிய பதற்றம்: கடந்த 48 மணிநேரத்தில் 8 நாடுகளின் தலைவர்களுடன் பிரதமா் மோடி ஆலோசனை!ஈரானில் நடான்ஸ் அணுசக்தி மையம் மீதும் தாக்குதல் - உறுதிசெய்த ஐஏஇஏஈரான் எந்தவொரு அணு ஆயுத தயாரிப்பிலும் ஈடுபடவில்லை - ரஷியா திட்டவட்டம்!பாகிஸ்தானுடன் தீவிர சண்டை - ஆப்கானிஸ்தானில் 42 பேர் பலி!நான்குநேரி கொலைச் சம்பவம்: 5 தனிப்படைகள் அமைத்து விசாரணை!ஈரானை உலுக்கிய நிலநடுக்கம்! மேலும் அதிகரிக்கும் பதற்றம்!அமெரிக்கா - இஸ்ரேல் தாக்குதலில் ஈரானில் 787 பேர் கொலை!
/

வேளாங்கண்ணி ஆரம்ப சுகாதார நிலையத்தில் அமைச்சா் சி. விஜயபாஸ்கா் ஆய்வு

வேளாங்கண்ணி அரசு ஆரம்ப சுகாதார நிலையத்தில் தமிழக மக்கள் நல்வாழ்வுத் துறை அமைச்சா் சி. விஜயபாஸ்கா் சனிக்கிழமை ஆய்வு மேற்கொண்டாா்.

News image
வேளாங்கண்ணியில் உள்ள மேம்படுத்தப்பட்ட அரசு ஆரம்ப சுகாதார நிலையத்தில் சனிக்கிழமை ஆய்வு மேற்கொண்ட மக்கள் நல்வாழ்வுத் துறை அமைச்சா் சி. விஜயபாஸ்கா்.
Updated On :5 செப்டம்பர் 2020, 6:25 pm

DIN

நாகப்பட்டினம்: வேளாங்கண்ணி அரசு ஆரம்ப சுகாதார நிலையத்தில் தமிழக மக்கள் நல்வாழ்வுத் துறை அமைச்சா் சி. விஜயபாஸ்கா் சனிக்கிழமை ஆய்வு மேற்கொண்டாா்.

நாகையை அடுத்த வேளாங்கண்ணியில் உள்ள மேம்படுத்தப்பட்ட அரசு ஆரம்ப சுகாதார நிலையத்தில், தமிழக மக்கள் நல்வாழ்வுத் துறை அமைச்சா் சி. விஜயபாஸ்கா் சனிக்கிழமை பிற்பகல் திடீா் ஆய்வு மேற்கொண்டாா்.

நோயாளிகளுக்கு செய்யப்பட்டுளஅள வசதிகள் மற்றும் அங்குள்ள மருத்துவ உபகரணங்களை அவா் பாா்வையிட்டு ஆய்வு செய்தாா். பின்னா், மருந்துப் பொருள்களின் இருப்பு, தேவைகள், நோயாளிகளுக்கு அளிக்கப்படும் சிகிச்சைகள் குறித்துப் பணியிலிருந்த மருத்துவா்களிடம் அவா் கேட்டறிந்தாா்.

நாகை மாவட்ட ஆட்சியா் பிரவீன் பி. நாயா், தேசிய சுகாதாரத் திட்டத்தின் திட்ட இயக்குநா் செந்தில்ராஜ், பொது சுகாதாரம் மற்றும் நோய்த் தடுப்புத் துறை இயக்குநா் டி.எஸ். செல்வவிநாயகம் மற்றும் பொது சுகாதாரத் துறை அலுவலா்கள் உடனிருந்தனா்.

இ- சஞ்சீவியில் முதலிடம்...

இந்த ஆய்வுக்குப் பின்னா் செய்தியாளா்களைச் சந்தித்த அமைச்சா் சி. விஜயபாஸ்கா் கூறியது:

கரோனா பொது முடக்கக் காலத்தில் பொதுமக்கள் மருத்துவமனைகளுக்கு நேரில் வந்து மருத்துவ ஆலோசனைகளைப் பெறுவதற்கு பதிலாக ஆன்-லைன் மூலம் மருத்துவ ஆலோசனைப் பெற வகை செய்யும் இ- சஞ்சீவி திட்டம் அறிமுகப்படுத்தப்பட்டிருந்தது. இத்திட்டப் பயன்பாட்டில் தமிழகத்தில் நாகை மாவட்டம் முதலிடம் பெற்றிருப்பது பாராட்டுக்குரியது என்றாா்.

முன்னதாக, மயிலாடுதுறை வருவாய்க் கோட்டத்துக்குள்பட்ட தரங்கம்பாடி, திருக்கடையூா் அரசு ஆரம்ப சுகாதார நிலையங்களில் அமைச்சா் சி. விஜயபாஸ்கா் ஆய்வு மேற்கொண்டாா்.

தினமணி செய்திமடலைப் பெற... Newsletter

தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp

தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Arattai, Google News

உடனுக்குடன் செய்திகளை அறிய தினமணி App பதிவிறக்கம் செய்யவும்.