ஈரானால் அச்சுறுத்தல் இல்லை - போரை ஆதரிக்க முடியாது: அமெரிக்க தேசிய பயங்கரவாத எதிர்ப்பு மைய இயக்குநர் ராஜிநாமாரஜினி ரசிகர்களுக்கு அங்கீகாரம் கொடுத்தது தவெக : ஆதவ் அர்ஜுனா விளக்கம்234 தொகுதிகளிலும் தவெக தனித்துப் போட்டி! - ஆதவ் அர்ஜுனா பேச்சுபெண்கள், குழந்தைகளுக்கு எதிரான குற்றங்களில் தமிழகம் முதலிடம்: அண்ணாமலைமேற்காசிய பதற்றம்: சர்வதேச நோயாளிகள் வருகை 30% சரிவு!மேற்கு வங்கத்தில் கூட்டணியின்றி போட்டி! 291 வேட்பாளர்களை அறிவித்தார் மமதா பானர்ஜி!கேரள தேர்தல்: ஐ.யூ.எம்.எல். 27 இடங்களில் போட்டி - வேட்பாளர்கள் அறிவிப்பு!கேரள தேர்தல்: ஐ.யூ.எம்.எல். 27 இடங்களில் போட்டி - வேட்பாளர்கள் அறிவிப்பு!விசில் சத்தம்தான் நம் தேசிய கீதம்; அது கேட்டால் வெற்றி நிச்சயம் - ஓ. பன்னீர் செல்வம் உடல் எடை குறைப்பு சிகிச்சை: மேலும் 3 மருந்துகளுக்கு அனுமதி!கரூர் கூட்ட நெரிசல் பலி விவகாரம் : செந்தில் பாலாஜியிடம் 6 மணி நேரம் சிபிஐ விசாரணை!தொகுதிப் பங்கீடு: திமுக - மார்க்சிஸ்ட் கம்யூ. 3-ம் சுற்றுப் பேச்சுவார்த்தை! தமிழக தேர்தல்: 2 நாள்களில் ரூ. 23 கோடி பணம், பரிசுப் பொருள்கள் பறிமுதல்!பாமக வழக்கு: ராமதாஸுக்கு பின்னடைவு! தேர்தல் முடிந்தபிறகே விசாரணை!புதுச்சேரியில் 2-ம் நாளாக யாரும் வேட்புமனு தாக்கல் செய்யவில்லைதமிழ்நாடு உள்பட 5 மாநிலங்களுக்கு 1,111 தேர்தல் பார்வையாளர்கள்!
/

காவிரிப்படுகையில் எண்ணெய்க் கிணறுகள் தோண்ட 3 ஆண்டு அனுமதி கால நீட்டிப்பு: மீத்தேன் திட்ட எதிர்ப்புக் கூட்டமைப்பு கண்டனம்

காவிரிப்படுகையில் எண்ணெய்க் கிணறுகள் தோண்ட 3 ஆண்டு அனுமதி கால நீட்டிப்பு செய்யப்பட்டுள்ளதற்கு மீத்தேன் திட்ட எதிர்ப்புக் கூட்டமைப்பு கண்டனம் தெரிவித்துள்ளது. 

News image
பேராசிரியர் த.ஜெயராமன்.
Updated On :12 செப்டம்பர் 2020, 1:04 pm

DIN

காவிரிப்படுகையில் எண்ணெய்க் கிணறுகள் தோண்ட 3 ஆண்டு அனுமதி கால நீட்டிப்பு செய்யப்பட்டுள்ளதற்கு மீத்தேன் திட்ட எதிர்ப்புக் கூட்டமைப்பு கண்டனம் தெரிவித்துள்ளது. 

இதுகுறித்து, அக்கூட்டமைப்பின் தலைமை ஒருங்கிணைப்பாளர் பேராசிரியர் த.ஜெயராமன் சனிக்கிழமை வெளியிட்ட அறிக்கையில் கூறியது: காவிரிப்படுகையில் 24 எண்ணெய் எரிவாயுக் கிணறுகள் அமைக்க 2013-இல் ஓ.என்.ஜி.சி நிறுவனத்துக்கு சுற்றுச்சூழல் துறையின் அனுமதி வழங்கப்பட்டது. ஆனால் மக்களின் எதிர்ப்பின் காரணமாக கடந்த 7 ஆண்டுகளாக கிணறுகளை ஓஎன்ஜிசியால் அமைக்க முடியவில்லை. காவிரிப் படுகையில், நாகை, திருவாரூர், புதுக்கோட்டை மாவட்டங்களில் 24 கிணறுகளில் 16 கிணறுகளை தொடக்க நிலையிலேயே ஓஎன்ஜிசி அமைத்துவிட்டதாகக் கூறுகிறது. மீதமுள்ள கிணறுகளை அமைப்பதற்கு ஓ.என்.ஜி.சி காலநீட்டிப்பு அனுமதி கோரி விண்ணப்பித்திருந்தது. சுற்றுச்சூழல் துறையின் அனுமதிக்கு மேலும் 3 ஆண்டுகளுக்கு கால நீட்டிப்பு வழங்க சுற்றுச்சூழல்துறையின் நிபுணர் மதிப்பீட்டுக் குழு மத்திய சுற்றுச்சூழல் துறைக்கு பரிந்துரை செய்துள்ளது. 

தமிழகத்தில் காவிரி படுகையில் 2023-ஆம் ஆண்டு ஆகஸ்ட் 20-ஆம் தேதி வரை கூடுதல் அவகாசம் வழங்க பரிந்துரைக்கப்பட்டுள்ளது. இதனை மீத்தேன் திட்ட எதிர்ப்புக் கூட்டமைப்பு வன்மையாகக் கண்டிக்கிறது. ஓ.என்.ஜி.சி காவிரிப் படுகையில் 104 கிணறுகளை அமைக்கக்கூடிய பெரும் திட்டத்தை வைத்துள்ளது. அடுத்து ஹைட்ரோகார்பன் எடுக்க ஏலத்தில் பெற்ற காவிரிப் படுகைப்; பகுதியில் நிலத்திலும், கடலிலும் எண்ணெய் எரிவாயுக் கிணறுகளை ஏராளமாக அமைக்க ஓ.என்.ஜி.சி., வேதாந்தா, ஆயில் இண்டியா லிமிடெட் ஆகிய நிறுவனங்கள் திட்டமிட்டு காத்திருக்கின்றன. 2019-இல் மட்டும் காவிரிப் படுகையில் 489 எண்ணெய் எரிவாயுக் கிணறுகள் அமைக்க அனுமதி வழங்கப்பட்டுள்ளது. இத்திட்டங்கள் நிறைவேற்றப்பட்டால் காவிரிப்படுகை என்பது காணாமல் போகும் அபாயம் உள்ளது.

இந்நிலையில்தான் கடுமையாகப் போராடி காவிரிப் படுகையைப் பாதுகாக்கப்பட்ட வேளாண் மண்டலம் என்று அறிவிக்கச் செய்யும் சட்டத்தைப் பெற்றோம்.  2020- ஆம் ஆண்டு பிப்ரவரி 21-ஆம் தேதி தமிழ்நாடு பாதுகாக்கப்பட்ட வேளாண் மண்டலம் மேம்பாட்டுச் சட்டம் நிறைவேற்றப்பட்டது. காவிரிப் படுகையைப் பாதுகாக்கப்பட்ட வேளாண் மண்டலம் என்று அறிவித்து சட்டம் இயற்றப்பட்டுவிட்ட நிலையில், படுகையில் மேலும் எண்ணெய் கிணறுகளை அமைக்க முயற்சிப்பது தமிழக அரசையும், சட்டம் இயற்றிய தமிழ்நாடு சட்டப்பேரவையையும் சிறுமைப் படுத்துவதாகும். தமிழக அரசு தன் ஆட்சேபணையை வலிமையாகத் தெரிவிக்க வேண்டும். 2018-ஆம் ஆண்டிலேயே இந்தியப் பெட்ரோலிய துறை, இனி அமைக்கப்பட இருக்கும் அத்தனை கிணறுகளுமே ஹைட்ரோகார்பன் கிணறுகள்தான் என்று அறிவித்துவிட்டது. இவை அனைத்திலும் அபாயகர நீரியல் விரிசல் முறையே பின்பற்றப்படும்.

இந்நிலையில், முன்பு அனுமதி பெற்று இப்போது அமைக்கப்பட இருக்கும் கிணறுகளும் ஹைட்ரோகார்பன் கிணறுகளே என்பதைத் தமிழக அரசு நினைவில்கொள்ள வேண்டும். இது தமிழக அரசு அறிவித்துள்ள கொள்கை நிலைப்பாட்டிற்கு முரணானது ஆகும். 2020 ஆம் ஆண்டு நிறைவேற்றப்பட்டுள்ள தமிழ்நாடு பாதுகாக்கப்பட்ட வேளாண் மண்டல மேம்பாட்டுச் சட்டத்தை அவமதிக்கும் செயலை ஏற்கமுடியாது. மேலும், முன்னமே அனுமதி பெற்று இதுவரை அமைக்கப்படாத கிணறுகள் அத்தனையும் புதிய கிணறுகளே என்றும், ஆகவே அவற்றை அனுமதிக்க முடியாது என்றும் முன்னமே தமிழக தொழில்துறை முதன்மைச் செயலர் அறிவித்திருக்கிறார். வேளாண் மண்டலப் பாதுகாப்புச் சட்டத்தை தளர்ச்சி இல்லாமல் தமிழக அரசு நடைமுறைப்படுத்த வேண்டும். புதிய அறிவிக்கையின்படி ஏற்படுத்தப்பட்டுள்ள பாதுகாக்கப்பட்ட வேளாண் மண்டல ஆணையம் தன் கடமையைச் செய்ய வேண்டும். இவற்றைக் கவனத்தில் கொண்டு தமிழ்நாடு வேளாண் மண்டல பாதுகாப்பு ஆணையம் உடனடியாக தமிழக அரசுக்குத் தன் பரிந்துரையை வழங்க வேண்டும். 

தமிழக அரசு இந்திய அரசுக்குக் கடிதம் எழுதி, தன் கண்டனத்தைப் பதிவு செய்ய வேண்டும். பாதுகாக்கப்பட்ட வேளாண் மண்டலப் பகுதியில் எண்ணெய் எரிவாயுக் கிணறுகளை அமைக்க அனுமதிக்க முடியாது என்பதை தெளிவுபடுத்த வேண்டும். தமிழக அரசு  உடனடியாக காவிரிப் படுகை முழுவதையுமே பாதுகாக்கப்பட்ட வேளாண் மண்டலமாக அறிவித்து, படுகை முழுவதையுமே பாதுகாக்க ஆவண செய்ய வேண்டும். இவற்றை மீறி ஓ.என்.ஜி.சி நிறுவனமோ, வேதாந்தா நிறுவனமோ எண்ணெய்க் கிணறுகள் அமைக்க முற்பட்டால், வேளாண் மண்டலப் பாதுகாப்புச் சட்டத்தில்  குறிப்பிட்டுள்ளபடி, ஆறு மாதம் சிறைத் தண்டனையும், ரூ.50 லட்சம் வரை அபராதமும் விதிக்கப்படும் என்பதை தமிழக அரசு தெளிவு படுத்த வேண்டும். எந்த எண்ணெய் நிறுவனமும் அடாவடியாக எண்ணெய் எரிவாயுக் கிணறுகளை அமைக்க முயன்றால், மீத்தேன் திட்ட எதிர்ப்புக் கூட்டமைப்பு கரோனா முடக்கத்தையும் பொருட்படுத்தாமல், மக்களை அணிதிரட்டி களத்தில் நிறுத்தும். இவ்வாறு அந்த அறிக்கையில் குறிப்பிட்டுள்ளார்.

தினமணி செய்திமடலைப் பெற... Newsletter

தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp

தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Arattai, Google News

உடனுக்குடன் செய்திகளை அறிய தினமணி App பதிவிறக்கம் செய்யவும்.