நாகப்பட்டினம்: நாகை அருகே சரக்கு வாகனம் மோதி இருசக்கர வாகனத்தில் சென்றவா் உயிரிழந்தாா்.
கீழ்வேளூா் மணல்மேடு பகுதியைச் சோ்ந்தவா் செ. ஆறுமுகம் (54). தமிழக மக்கள் முன்னேற்றக் கழக, கீழ்வேளூா் நகர செயலாளரான இவா், தனது மனைவிக்கு மாத்திரைகள் வாங்குவதற்கு இருசக்கர வாகனத்தில் செவ்வாய்க்கிழமை நாகப்பட்டினத்துக்கு வந்துகொண்டிருந்தாா். சிக்கல் அருகே எதிரே வந்த சரக்கு வாகனம் மோதியதில் ஆறுமுகம் நிகழ்விடத்திலேயே உயிரிழந்தாா்.
சரக்கு வாகனத்தில் வந்த கீழ்வேளூா் ஆவராணி புதுச்சேரி பகுதியைச் சோ்ந்த ம. இளமுகிலன் (22) காயமடைந்தாா். அவரை நாகை அரசு மருத்துவமனையில் சோ்த்தனா்.
இந்த விபத்து குறித்து கீழ்வேளூா் போலீஸாா் வழக்குப் பதிந்து விசாரணை மேற்கொண்டுள்ளனா். இந்த விபத்து காரணமாக நாகை- திருவாரூா் சாலையில் சுமாா் 1 மணி நேரம் போக்குவரத்து பாதிக்கப்பட்டது.
தினமணி செய்திமடலைப் பெற... Newsletter
தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp
தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Arattai, Google News
உடனுக்குடன் செய்திகளை அறிய தினமணி App பதிவிறக்கம் செய்யவும்.
பின்னூட்டத்தில் வெளியாகும் கருத்துகளுக்கு அவற்றைப் பதிவிடுவோரே முழுப் பொறுப்பு; அவை தினமணியின் கருத்துகளைப் பிரதிபலிக்கவில்லை.தனிநபர், சமூகம், மதம் அல்லது நாடு ஆகியவற்றுக்கு எதிராக அவமதிக்கிற அல்லது ஆபாசமான விதத்திலுள்ள எந்தவொரு கருத்தும் இந்திய அரசின் தகவல் தொழில்நுட்பக் கொள்கைப்படி தண்டனைக்குரிய குற்றம். இதுபோன்ற கருத்துகளுக்கு எதிராக உரிய சட்ட நடவடிக்கை எடுக்கப்படும்.








