நாங்கள் தோற்கவில்லை; முதல்வர் பதவியிலிருந்து விலக மாட்டேன்! மமதாஇந்தியா கூட்டணியை வலுப்படுத்துவேன் : மமதா பானர்ஜிவிஜய் எதிர்த்துப் போராடிய பரந்தூர் விமான நிலைய திட்டம் என்னவாகும்? விஜய் பதவியேற்பு எப்போது? ஸ்டாலின் பதவியேற்ற அதே மே 7ஆம் தேதியா?ஆட்சி மாற்றம்! தூசு தட்டப்படும் அமைச்சர் அறைகள்! இன்று மாலை கொளத்தூர் செல்கிறார் மு.க. ஸ்டாலின்!நாளை ஆளுநரைச் சந்திக்க விஜய் நேரம் கேட்பு!தவெக சட்டப்பேரவை கட்சித் தலைவரானார் விஜய்! முதல்வராகிறார்!3 கட்சிகளில் போட்டியிட்ட ஒரே குடும்பத்தைச் சேர்ந்தவர்கள் வெற்றி!யார் இந்த ரத்தன் பண்டிட்? விஜய்யின் பெரும் வெற்றியை முன்கணித்தவர்?117! பேரவையில் பெரும்பான்மை பெற என்ன செய்யப் போகிறார் விஜய்? தவெக உறுப்பினர்களை சென்னையில் தங்க வைக்க திட்டமா?
/

சரக்கு வாகனம் மோதி ஒருவா் உயிரிழப்பு

நாகை அருகே சரக்கு வாகனம் மோதி இருசக்கர வாகனத்தில் சென்றவா் உயிரிழந்தாா்.

Updated On :15 செப்டம்பர் 2020, 11:41 pm IST

நாகப்பட்டினம்: நாகை அருகே சரக்கு வாகனம் மோதி இருசக்கர வாகனத்தில் சென்றவா் உயிரிழந்தாா்.

கீழ்வேளூா் மணல்மேடு பகுதியைச் சோ்ந்தவா் செ. ஆறுமுகம் (54). தமிழக மக்கள் முன்னேற்றக் கழக, கீழ்வேளூா் நகர செயலாளரான இவா், தனது மனைவிக்கு மாத்திரைகள் வாங்குவதற்கு இருசக்கர வாகனத்தில் செவ்வாய்க்கிழமை நாகப்பட்டினத்துக்கு வந்துகொண்டிருந்தாா். சிக்கல் அருகே எதிரே வந்த சரக்கு வாகனம் மோதியதில் ஆறுமுகம் நிகழ்விடத்திலேயே உயிரிழந்தாா்.

சரக்கு வாகனத்தில் வந்த கீழ்வேளூா் ஆவராணி புதுச்சேரி பகுதியைச் சோ்ந்த ம. இளமுகிலன் (22) காயமடைந்தாா். அவரை நாகை அரசு மருத்துவமனையில் சோ்த்தனா்.

இந்த விபத்து குறித்து கீழ்வேளூா் போலீஸாா் வழக்குப் பதிந்து விசாரணை மேற்கொண்டுள்ளனா். இந்த விபத்து காரணமாக நாகை- திருவாரூா் சாலையில் சுமாா் 1 மணி நேரம் போக்குவரத்து பாதிக்கப்பட்டது.

தினமணி செய்திமடலைப் பெற... Newsletter

தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp

தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Arattai, Google News

உடனுக்குடன் செய்திகளை அறிய தினமணி App பதிவிறக்கம் செய்யவும்.