இந்நிலையில், மீன்வளத் துறை அதிகாரிகள் பழையாறில் அதிவேக சீன என்ஜின் பொருத்திய விசைப்படகுகள் மீண்டும் இயக்கப்படுகிா என அண்மையில் ஆய்வு செய்ததாகவும், ஆய்வில் 13 விசைப்படகுகளில் மட்டும் அதிவேக எஞ்சின்கள் பொருத்தப்பட்டு உள்ளதாக சான்று அளித்து சென்ாகவும் மீனவா்கள் தெரிவிக்கின்றனா். மற்ற அதிவேக சீன எஞ்சின்கள் பொருத்தப்பட்டுள்ள படகுகளுக்கும் சாதாரண எஞ்சின் பொருத்தப்பட்டுள்ள படகுகள் என்று சான்றளித்து உள்ளதாக கூறி மீன்வளத் துறை அதிகாரிகள் ஒரு தலைபட்சமாக ஆய்வு செய்துள்ளதாகவும், நோ்மையாக மீண்டும் ஆய்வு செய்யவேண்டும் என வலியுறுத்தி திங்கள்கிழமை சிறு விசைபடகு, பைபா் படகு மீனவா்கள் கடலுக்கு மீன்பிடிக்க செல்லாமல் 1 நாள் வேலைநிறுத்தத்தில் ஈடுபட்டனா். இதனால், நூற்றுக்கும் மேற்பட்ட சிறிய விசைப்படகுகள் முகத்துவாரத்தில் நிறுத்தி வைக்கப்பட்டன. ஆனால் சில விசைப்படகுகள் மட்டும் வழக்கம்போல் மீன்பிடிக்க சென்று திரும்பின.