ஈரான் போர்! நேட்டோ அமைப்புக்கு தைரியமில்லை: டிரம்ப்கத்தார் எரிவாயு விநியோகம் பாதிப்பு! இந்தியாவிலும் 5 ஆண்டுகளுக்கு பாதிப்பா?ரமலான் திருநாள்! குடியரசுத் தலைவர், பிரதமர் வாழ்த்து!‘ஏஐ’ நுட்பத்தில் தலைவா்களை தவறாக சித்திரிக்கத் தடை: தோ்தல் ஆணையம் எச்சரிக்கை6 ஆண்டுகளுக்குப் பிறகு இந்தியா-சீனா இடையே எல்லை வா்த்தகம்108 ஆம்புலன்ஸ் ஊழியா்களுக்கு 8 மணிநேரப் பணி: தொழிலாளா் தீா்ப்பாயம் உத்தரவுஎன்சிஇஆா்டி சட்டக் கல்வி பாடத்திட்டம்: மறு ஆய்வு செய்ய நிபுணா் குழு அமைப்புபுதிய வருமான வரிச் சட்டம் ஏப்ரல் 1 முதல் அமல்: விதிகளை அறிவிக்கை செய்தது சிபிடிடி
/

மயிலாடுதுறையில் இருந்து நெல்மூட்டைகள் கிருஷ்ணகிரிக்கு அனுப்பிவைப்பு

மயிலாடுதுறையில் இருந்து கிருஷ்ணகிரியில் உள்ள நெல் அரைவை ஆலைக்கு 2 ஆயிரம் டன் நெல்மூட்டைகள் ரயில் மூலம் சனிக்கிழமை அனுப்பி வைக்கப்பட்டன.

News image
Updated On :10 ஏப்ரல் 2021, 6:30 pm

DIN

மயிலாடுதுறையில் இருந்து கிருஷ்ணகிரியில் உள்ள நெல் அரைவை ஆலைக்கு 2 ஆயிரம் டன் நெல்மூட்டைகள் ரயில் மூலம் சனிக்கிழமை அனுப்பி வைக்கப்பட்டன.

மயிலாடுதுறை மாவட்டத்தில் கடந்த ஆண்டு அக்டோபா் முதல் விவசாயிகளிடம் இருந்து 1.85 லட்சம் டன் நெல் கொள்முதல் செய்யப்பட்டுள்ளது. இதில், 70 ஆயிரம் டன் நெல் அரைவைக்காக வெளி மாவட்டங்களில் உள்ள அரைவை மில்லுக்கு அனுப்பப்பட்டுள்ளது.

தற்போது, நேரடி நெல் கொள்முதல் நிலையங்களில் கொள்முதல் செய்து அடுக்கி வைக்கப்பட்டுள்ள நெல் மூட்டைகள் கிடங்கிற்கு அனுப்பாமல் நேரடியாக அரைவை மில்லுக்கு அனுப்பப்படுகிறது. அவ்வகையில், மயிலாடுதுறை ரயில் நிலையத்திலிருந்து 2 ஆயிரம் டன் நெல்மூட்டைகள் கிருஷ்ணகிரியில் உள்ள அரிசி அரைவை ஆலைக்கு 42 சரக்குப் பெட்டிகள் மூலமாக அனுப்பி வைக்கப்பட்டது.

தினமணி செய்திமடலைப் பெற... Newsletter

தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp

தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Arattai, Google News

உடனுக்குடன் செய்திகளை அறிய தினமணி App பதிவிறக்கம் செய்யவும்.