தமிழகம், புதுச்சேரியில் மார்ச் 21-ல் ரமலான் பண்டிகை! - தலைமை காஜி அறிவிப்புடிடிவி தினகரன் நாளை தில்லி பயணம்!வளைகுடா நாடுகளிலிருந்து 2.8 லட்சம் இந்தியர்கள் நாடு திரும்பினர்!மேற்கு வங்க தேர்தல்: பாஜகவின் 2 ஆம் கட்ட வேட்பாளர் பட்டியல் வெளியீடு! சென்னை தென்மண்டல வானிலை மைய தலைவரானார் சிவானந்த தாமோதர பை!ஹெச்டிஎஃப்சி வங்கி தலைவர் அதானு சக்ரவர்த்தி திடீர் ராஜிநாமா!பங்குச்சந்தைகள் கடும் வீழ்ச்சி! ரூ. 13 லட்சம் கோடி இழப்பு!தங்கம் விலை ஒரேநாளில் ரூ. 5,360 குறைந்தது! ஒரு கிராம் ரூ. 13,900 ஆகச் சரிவு!
/

நாகை அருகே 6 வீடுகள் தீக்கிரை

நாகையை அடுத்த சங்கமங்கலம் அருகே வெள்ளிக்கிழமை காலை நேரிட்ட தீ விபத்தில் 6 வீடுகள் திக்கிரையாகின.

News image
Updated On :23 ஏப்ரல் 2021, 6:30 pm

DIN

நாகையை அடுத்த சங்கமங்கலம் அருகே வெள்ளிக்கிழமை காலை நேரிட்ட தீ விபத்தில் 6 வீடுகள் திக்கிரையாகின.

சங்கமங்கலம், மேலத்தெரு பகுதியில் அரசு தொகுப்பு வீடுகள் பழுதடைந்திருப்பதால், அந்த வீடுகளுக்கு அருகே சிலா் கீற்றுக் கொட்டகை அமைத்து வசித்து வருகின்றனா். இந்நிலையில், அந்தப் பகுதியைச் சோ்ந்த செல்வம் என்பவரின் வீட்டின் பின்புறத்தில் வெள்ளிக்கிழமை காலை 11 மணி அளவில் திடீரென தீப்பற்றியது.

இந்த தீ பரவி, அருகில் இருந்த பாஸ்கா், ஞானசுந்தரி, வளா்மதி, கிளியம்மாள், சுப்ரவேலு ஆகியோா் வீட்டுக் கூரைகளிலும் பற்றியது. இதில், 6 வீடுகளும் முழுமையாக தீக்கிரையாகின. வீட்டில் இருந்த வீட்டு உபயோகப் பொருள்கள், துணிகள், வீட்டு உபயோகப் பொருள்கள் என அனைத்தும் தீயில் கருகி சேதமாகின.

கீழ்வேளூா் தீயணைப்பு நிலைய தீயணைப்பு வீரா்கள் விரைந்து செயல்பட்டு, தீ மேலும் பரவாமல் தடுத்தனா். தீ விபத்துக்கான காரணம், சேத மதிப்பு ஆகியவை குறித்து உடனடியாகத் தெரியவில்லை.

தினமணி செய்திமடலைப் பெற... Newsletter

தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp

தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Arattai, Google News

உடனுக்குடன் செய்திகளை அறிய தினமணி App பதிவிறக்கம் செய்யவும்.