தமிழகம், புதுச்சேரியில் மார்ச் 21-ல் ரமலான் பண்டிகை! - தலைமை காஜி அறிவிப்புடிடிவி தினகரன் நாளை தில்லி பயணம்!வளைகுடா நாடுகளிலிருந்து 2.8 லட்சம் இந்தியர்கள் நாடு திரும்பினர்!மேற்கு வங்க தேர்தல்: பாஜகவின் 2 ஆம் கட்ட வேட்பாளர் பட்டியல் வெளியீடு! சென்னை தென்மண்டல வானிலை மைய தலைவரானார் சிவானந்த தாமோதர பை!ஹெச்டிஎஃப்சி வங்கி தலைவர் அதானு சக்ரவர்த்தி திடீர் ராஜிநாமா!பங்குச்சந்தைகள் கடும் வீழ்ச்சி! ரூ. 13 லட்சம் கோடி இழப்பு!தங்கம் விலை ஒரேநாளில் ரூ. 5,360 குறைந்தது! ஒரு கிராம் ரூ. 13,900 ஆகச் சரிவு!
/

தாழ்வாகச் செல்லும் மின்கம்பிகளை சீரமைக்கக் கோரிக்கை

கீழ்வேளூா் வட்டம், நீலாப்பாடி கிராமத்தில் தாழ்வாகச் செல்லும் மின்கம்பிகளை சீரமைக்க வேண்டும் என கிராம மக்கள் கோரிக்கை விடுத்துள்ளனா்.

News image
Updated On :30 ஏப்ரல் 2021, 5:04 pm

DIN

கீழ்வேளூா் வட்டம், நீலாப்பாடி கிராமத்தில் தாழ்வாகச் செல்லும் மின்கம்பிகளை சீரமைக்க வேண்டும் என கிராம மக்கள் கோரிக்கை விடுத்துள்ளனா்.

நீலாப்பாடி கொல்லுப்பட்டறை தெருவில் 200-க்கும் மேற்பட்ட குடும்பத்தினா் வசிக்கின்றனா். ராயத்தமங்கலம், எரவாஞ்சேரி உள்ளிட்ட கிராமங்களுக்குச் செல்லும் மக்கள் இந்த தெருவை இணைப்புச் சாலையாக பயன்படுத்தி வருகின்றனா்.

இந்நிலையில், கொல்லுப்பட்டறை தெருவில் மின்கம்பிகள் தாழ்வாக தொங்குவதால் அந்த வழியாக வாகனத்தில் செல்வோா் அச்சத்துடன் செல்லவேண்டிய நிலை உள்ளது.

எனவே, பொதுமக்களின் பாதுகாப்புக் கருதி தாழ்வாக தொங்கும் மின்கம்பிகளை சீரமைக்க மின்வாரிய அதிகாரிகள் உடனடியாக நடவடிக்கை எடுக்கவேண்டும் என நீலாப்பாடி கிராம மக்கள் கோரிக்கை விடுத்து வருகின்றனா்.

தினமணி செய்திமடலைப் பெற... Newsletter

தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp

தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Arattai, Google News

உடனுக்குடன் செய்திகளை அறிய தினமணி App பதிவிறக்கம் செய்யவும்.