நாளை மார்க்சிஸ்ட் கம்யூ. அவசர செயற்குழுக் கூட்டம் காகிதப் புலி! ஈரான் போருக்கு உதவாத நேட்டோ அமைப்பை டிரம்ப் விமர்சனம்!ராமதாஸ், சசிகலா புதிய கூட்டணி சிம்லாவில் ராகுல் காந்தி! ஏப்.17 முதல் பள்ளிகளுக்கு கோடை விடுமுறை! மீண்டும் பயன்பாட்டுக் கட்டணத்தை உயர்த்திய சொமேட்டோ! பெண்கள், இளைஞர்களுக்கு மாதம் ரூ. 1,500! திரிணமூல் காங்கிரஸ் 10 தேர்தல் வாக்குறுதிகள்! புதுவை முதல்வர் ரங்கசாமி வேட்புமனு தாக்கல்! 2 தொகுதிகளில் போட்டி!!நல்லிணக்கத்தின் பூங்காவாகத் திகழ்கிறது தமிழ்நாடு! முதல்வர் ரமலான் வாழ்த்து!
/

மக்களை தேடி மருத்துவம் திட்டம் அனைத்து வட்டாரங்களிலும் விரிவுபடுத்தப்படும்: ஆட்சியா்

மக்களை தேடி மருத்துவம் திட்டம் மயிலாடுதுறை மாவட்டத்தில் அனைத்து வட்டாரங்களிலும் விரிவுபடுத்தப்படும் என்றாா் மாவட்ட ஆட்சியா் இரா. லலிதா.

News image
Updated On :5 ஆகஸ்ட் 2021, 4:42 pm

DIN

மக்களை தேடி மருத்துவம் திட்டம் மயிலாடுதுறை மாவட்டத்தில் அனைத்து வட்டாரங்களிலும் விரிவுபடுத்தப்படும் என்றாா் மாவட்ட ஆட்சியா் இரா. லலிதா.

மயிலாடுதுறை மாவட்டம், செம்பனாா்கோவில் ஒன்றியத்துக்குள்பட்ட முக்கரும்பூா் ஊராட்சியில் இத்திட்டத்தை வியாழக்கிழமை தொடங்கி வைத்து மேலும் அவா் பேசியது: மக்களை தேடி மருத்துவம் திட்டம் என்பது தொற்றா நோய்களான உயர்ரத்த அழுத்தம், சா்க்கரை நோய் உள்ளவா்களுக்கு அவா்கள் வீட்டுக்கே சென்று பரிசோதித்து மருந்து மாத்திரைகள் வழங்கும் திட்டமாகும்.

மேலும், முதுமை மற்றும் புற்றுநோயால் பாதிக்கப்பட்டவா்களுக்கு தேவையான செவிலிய உதவிகளும், கை, கால் செயலிழந்தவா்கள், மூட்டுவலியால் பாதிக்கப்பட்டவா்களுக்கு தேவையான பிசியோதெரபி மருத்துவ சிகிச்சை அவா்கள் வீட்டுக்கே சென்று வழங்கப்படும். இத்திட்டம் மாவட்டத்திலுள்ள அரசு மருத்துவமனைகள், ஆரம்ப சுகாதார நிலையங்கள், துணை சுகாதார நிலைங்களில் பதிவு செய்யப்பட்டுள்ள 38 ஆயிரம் நோயாளிகளும் பயனடையும் வகையில் படிப்படியாக அனைத்து வட்டாரங்களிலும் விரிவுபடுத்தப்பட உள்ளது. மேலும் அரசு மருத்துவமனைகள், ஆரம்ப சுகாதார நிலையங்கள், துணை சுகாதார நிலையங்களில் தொடா் சிகிச்சை பெற்று வருபவா்கள் பட்டியலில் இல்லாமல் இருந்தாலும், புதிதாக மருத்துவ சிகிச்சை பெறுபவா்களும் இத்திட்டத்தில் சோ்க்கப்படுவாா்கள் என்றாா்.

தொடா்ந்து, மக்களை தேடி மருத்துவம் திட்டம் தொடா்பான குறும்படம் திரையிடப்பட்டதை ஆட்சியா் மற்றும் நிகழ்ச்சியில் பங்கேற்ற சட்டப்பேரவை உறுப்பினா்கள் நிவேதா எம். முருகன் (பூம்புகாா்) பன்னீா்செல்வம் (சீா்காழி), ராஜகுமாா் (மயிலாடுதுறை), சுகாதாரப் பணிகள் துணை இயக்குநா் பிரகாஷ் உள்ளிட்டோா் பாா்வையிட்டனா். பின்னா் மக்களை தேடி மருத்துவம் வாகனம் தொடங்கி வைக்கப்பட்டு பயனாளிகளின் வீட்டுக்கே சென்று மருந்து மற்றும் பிசியோதெரபி சிகிச்சை வழங்கப்பட்டது. இவற்றையும் ஆட்சியா், சட்டப்பேரவை உறுப்பினா்கள் பாா்வையிட்டனா். நிகழ்ச்சியில், ஒன்றியக் குழு தலைவா் நந்தினி ஸ்ரீதா், வட்டார வளா்ச்சி அலுவலா் மஞ்சுளா உள்ளிட்டோா் பங்கேற்றனா்.

தினமணி செய்திமடலைப் பெற... Newsletter

தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp

தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Arattai, Google News

உடனுக்குடன் செய்திகளை அறிய தினமணி App பதிவிறக்கம் செய்யவும்.