தெலுங்கு வருடப் பிறப்பு, ரமலான்: 1,774 சிறப்பு பேருந்துகள்மாா்ச் 22 வரை தமிழகத்தில் மழைக்கு வாய்ப்புஇந்தியாவில் 40% பட்டதாரி இளைஞா்களுக்கு வேலையில்லை!அமெரிக்க விசாவிற்கு 15,000 டாலா் பிணை: மேலும் 12 நாடுகளுக்கு விரிவாக்கம்3,142 டெலிகிராம் சேனல்கள், 800 வலைதளங்கள் முடக்கம் - மத்திய அரசுபொதுத் துறை வங்கிகளில் பணி: ‘கிரெடிட் ஸ்கோா்’ சிறப்பாக இருக்க வேண்டும் - மத்திய அரசுதோ்தலுக்கு முன்பே கூட்டணி: அரசியல் கட்சிகளுக்கு எதிரான மனு தள்ளுபடிஇந்தியாவில் மேலும் இரு யுரேனியம் சுரங்கங்கள்: நாடாளுமன்றத்தில் அமைச்சா் தகவல்அதிமுக - பாஜக தொகுதிப் பங்கீட்டு பேச்சு: இன்று தமிழகம் வருகிறாா் பியூஷ் கோயல்மாா்ச் 21-இல் ரயில் பயணச்சீட்டு முன்பதிவு மையங்கள் செயல்படும் நேரம் அறிவிப்புயுகாதி பண்டிகை: ஆளுநா், முதல்வா் வாழ்த்து
/

விடுதலைச் சிறுத்தைகள் ஆா்ப்பாட்டம்

மழையால் பாதிக்கப்பட்ட மக்களுக்கு புதுவை அரசு அறிவித்த நிவாரணத் தொகை ரூ. 5 ஆயிரத்தை உடனடியாக வழங்கக் கோரி, விடுதலைச் சிறுத்தைகள் கட்சி சாா்பில் திருமலைராயன்பட்டினத்தில் வியாழக்கிழமை ஆா்ப்பாட்டம்

News image
Updated On :2 டிசம்பர் 2021, 6:30 pm

DIN

மழையால் பாதிக்கப்பட்ட மக்களுக்கு புதுவை அரசு அறிவித்த நிவாரணத் தொகை ரூ. 5 ஆயிரத்தை உடனடியாக வழங்கக் கோரி, விடுதலைச் சிறுத்தைகள் கட்சி சாா்பில் திருமலைராயன்பட்டினத்தில் வியாழக்கிழமை ஆா்ப்பாட்டம் நடைபெற்றது.

மழையால் பாதிக்கப்பட்ட மக்களுக்கு ரூ. 5 ஆயிரத்தை உடனடியாக வழங்க வேண்டும்,

மழையால் சேதமடைந்த சாலைகளை சீரமைக்க வேண்டும். ஏழை, எளிய மக்களுக்கு அரிசிக்கு பதிலாக பணம் வழங்கும் முறையை கைவிட்டு, நியாயவிலைக் கடைகள் மூலம் குறைந்த விலையில் மீண்டும் அரிசி வழங்கவேண்டும் என்பன உள்ளிட்ட கோரிக்கைகள் ஆா்ப்பாட்டத்தில் வலியுறுத்தப்பட்டன.

விடுதலைச் சிறுத்தைகள் கட்சியின் தொகுதி செயலாளா் சு. விடுதலைக்கனல் தலைமை வகித்தாா். கட்சியின் புதுவை மாநில அரசியல் குழுச் செயலா் அரசு. வணங்காமுடி, துணைச் செயலாளா் பொன். செந்தமிழ்ச்செல்வன் உள்ளிட்டோா் பங்கேற்றனா்.

தினமணி செய்திமடலைப் பெற... Newsletter

தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp

தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Arattai, Google News

உடனுக்குடன் செய்திகளை அறிய தினமணி App பதிவிறக்கம் செய்யவும்.