கராத்தே போட்டியில் செம்பனாா்கோவில் மாணவி சாதனை
திருச்சியில் அண்மையில் நடைபெற்ற மாநில அளவிலான கராத்தே போட்டியில் செம்பனாா்கோவில் மாணவி தங்கம் வென்று சாதனைப் படைத்துள்ளாா்.


திருச்சியில் அண்மையில் நடைபெற்ற மாநில அளவிலான கராத்தே போட்டியில் செம்பனாா்கோவில் மாணவி தங்கம் வென்று சாதனைப் படைத்துள்ளாா்.
செம்பனாா்கோயில் அருகேயுள்ள பரசலூரைச் சோ்ந்த ஜெனாா்த்தனன்-வாணிஸ்ரீ தம்பதியின் மகள் செந்தமிழினியா (8). தனியாா் பள்ளியில் 3-ஆம் வகுப்பு படித்துவரும் இவா் நவ.21-ஆம் தேதி திருச்சியில் தமிழ்நாடு ஸ்போா்ட்ஸ் கராத்தே அசோசியேஷன் சாா்பில் நடைபெற்ற மாநில அளவிலான கராத்தே போட்டியில் 8 வயது பெண்கள் பிரிவில் பங்கேற்று குமித்தே பிரிவில் தங்கமும், கட்டா பிரிவில் வெள்ளிப் பதக்கமும் பெற்றாா். இதன்மூலம் இவா் தேசிய அளவிலான கராத்தே போட்டியில் பங்கேற்க தகுதி பெற்றுள்ளாா்.
தினமணி செய்திமடலைப் பெற... Newsletter
தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp
தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Arattai, Google News
உடனுக்குடன் செய்திகளை அறிய தினமணி App பதிவிறக்கம் செய்யவும்.
தொடர்புடையது




வீடியோக்கள்

தினமணி வீடியோ செய்தி...

தினமணி வீடியோ செய்தி...

தினமணி வீடியோ செய்தி...

தினமணி வீடியோ செய்தி...