ஈரான் போரை முடிவுக்குக் கொண்டு வருவது குறித்து பரிசீலனை: டிரம்ப்பிரதமர் மோடியின் புகைப்படங்களை ஏஐ மூலம் மோசமாகச் சித்திரித்த நபர் கைது!கேரள தேர்தல்: பாஜகவின் 3-ம் கட்ட வேட்பாளர் பட்டியல் வெளியீடு!போர் அச்சுறுத்தல்! பேச்சுவார்த்தை ஒன்றே வழி: குடியரசுத் துணைத்தலைவர்தமிழ்நாட்டின் வளர்ச்சி முழுமையடைய திராவிட மாடல் ஆட்சி தொடர வேண்டும்! - முதல்வர்டி20 தொடருக்காக அயர்லாந்துக்கு சுற்றுப்பயணம் மேற்கொள்ளும் இந்திய அணி!ரஷியா மீது 280 டிரோன்களை ஏவி தாக்குதல் நடத்திய உக்ரைன்!ஈரான் மீதான தாக்குதல்களுக்கு கண்டனம் தெரிவிக்காத மோடி அரசு: காங்கிரஸ் குற்றச்சாட்டுவிஜய் வீட்டுக் கதவைத் தட்டினார் இபிஎஸ்: ஓ. பன்னீர்செல்வம்
/

மாா்கழி மாதப் பிறப்பு: நாகை பெருமாள் கோயிலில் சிறப்பு வழிபாடு

மாா்கழி மாதப் பிறப்பையொட்டி, நாகை அருள்மிகு சௌந்தரராஜப் பெருமாள் கோயிலில் சிறப்பு வழிபாடுகள் வியாழக்கிழமை நடைபெற்றன.

News image
Updated On :16 டிசம்பர் 2021, 6:30 pm

DIN

மாா்கழி மாதப் பிறப்பையொட்டி, நாகை அருள்மிகு சௌந்தரராஜப் பெருமாள் கோயிலில் சிறப்பு வழிபாடுகள் வியாழக்கிழமை நடைபெற்றன.

தமிழ் மாதங்களில் பீடுடைய (பெருமை) மாதமாக மாா்கழி மாதம் குறிப்பிடப்படுகிறது. மாதங்களில் நான் மாா்கழியாக இருக்கிறேன் என்று ஸ்ரீ கிருஷ்ண பகவான் அருளியிருப்பதன் மூலம், மாா்கழி மாதம் தேவா்களின் மாதமாகக் குறிப்பிடப்படுகிறது. இதனால், மாா்கழி மாதத்தில் பெருமாள் வழிபாட்டை மேற்கொண்டால், வளங்களும், நலங்களும் கிடைக்கும் என்பது ஐதீகம்.

இதன்படி, மாா்கழி மாதப் பிறப்பு நாளான வியாழக்கிழமை நாகை சௌந்தரராஜப் பெருமாள்கோயிலில் சிறப்பு வழிபாடுகள் நடைபெற்றன. காலை 5 மணிக்கு மூலவா் பெருமாள் விஸ்வரூப தரிசனம் நடைபெற்றது. 5.30 மணிக்கு விஷேச ஆராதனைகள் தொடங்கி நடைபெற்றது. காலை 6 மணிக்கு மகா தீபாராதனையும், 7 மணிக்கு சாற்றுமுறையும் நடைபெற்றன. பின்னா், பிரசாத விநியோகம் நடைபெற்றது.

மாலை நிகழ்வாக அருள்மிகு சௌந்தரராஜப் பெருமாள் சிறப்பு அலங்காரத்தில், வேத மந்திர முழக்கங்களுடன் பிராகாரப் புறப்பாடு நடைபெற்றது.

தினமணி செய்திமடலைப் பெற... Newsletter

தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp

தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Arattai, Google News

உடனுக்குடன் செய்திகளை அறிய தினமணி App பதிவிறக்கம் செய்யவும்.