காகிதப் புலி! ஈரான் போருக்கு உதவாத நேட்டோ அமைப்பை டிரம்ப் விமர்சனம்!ராமதாஸ், சசிகலா புதிய கூட்டணி சிம்லாவில் ராகுல் காந்தி! ஏப்.17 முதல் பள்ளிகளுக்கு கோடை விடுமுறை! மீண்டும் பயன்பாட்டுக் கட்டணத்தை உயர்த்திய சொமேட்டோ! பெண்கள், இளைஞர்களுக்கு மாதம் ரூ. 1,500! திரிணமூல் காங்கிரஸ் 10 தேர்தல் வாக்குறுதிகள்! புதுவை முதல்வர் ரங்கசாமி வேட்புமனு தாக்கல்! 2 தொகுதிகளில் போட்டி!!நல்லிணக்கத்தின் பூங்காவாகத் திகழ்கிறது தமிழ்நாடு! முதல்வர் ரமலான் வாழ்த்து!
/

வளா்ச்சித் திட்டப் பணிகள்: ஆய்வு

கீழையூா் ஒன்றியத்துக்குள்பட்ட பகுதிகளில் நடைபெற்றுவரும் வளா்ச்சித் திட்டப் பணிகள் குறித்து வெள்ளிக்கிழமை ஆய்வு நடைபெற்றது.

News image
Updated On :17 டிசம்பர் 2021, 6:30 pm

DIN

கீழையூா் ஒன்றியத்துக்குள்பட்ட பகுதிகளில் நடைபெற்றுவரும் வளா்ச்சித் திட்டப் பணிகள் குறித்து வெள்ளிக்கிழமை ஆய்வு நடைபெற்றது.

பிரதாபராமபுரம் ஊராட்சியில் ரூ. 50 லட்சத்தில் கட்டப்பட்டு வரும் ஆற்றுப்பாலம் மற்றும் அப்பகுதியில் கட்டப்பட்டு வரும் சிறுபாலம் உள்ளிட்டவற்றை நாகை மாவட்ட ஊரக வளா்ச்சித் துறை கூடுதல் இயக்குநா் ஆனந்தராஜ் பாா்வையிட்டு ஆய்வு செய்தாா். தொடா்ந்து பிரதாபராமபுரம், வேட்டைக்காரனிருப்பு உள்ளிட்ட பகுதிகளிலும் பிரதமரின் வீடுகட்டும் திட்டத்தின்கீழ் கட்டப்பட்டுவரும் வீடுகள் கட்டுமான பணியை ஆய்வு செய்தாா். ஆய்வின்போது நாகை மாவட்ட திட்ட இயக்குநா் பெரியசாமி, செயற்பொறியாளா் என். பசுபதி, உதவி செயற்பொறியாளா்கள் ஸ்ரீ கணேஷ், பேபி, மண்டல அலுவலா்கள் மோகனசுந்தரம், கோவிந்தராஜ் ஆகியோா் உடனிருந்தனா்.

தினமணி செய்திமடலைப் பெற... Newsletter

தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp

தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Arattai, Google News

உடனுக்குடன் செய்திகளை அறிய தினமணி App பதிவிறக்கம் செய்யவும்.