ஈரான் போரை முடிவுக்குக் கொண்டு வருவது குறித்து பரிசீலனை: டிரம்ப்பிரதமர் மோடியின் புகைப்படங்களை ஏஐ மூலம் மோசமாகச் சித்திரித்த நபர் கைது!கேரள தேர்தல்: பாஜகவின் 3-ம் கட்ட வேட்பாளர் பட்டியல் வெளியீடு!போர் அச்சுறுத்தல்! பேச்சுவார்த்தை ஒன்றே வழி: குடியரசுத் துணைத்தலைவர்தமிழ்நாட்டின் வளர்ச்சி முழுமையடைய திராவிட மாடல் ஆட்சி தொடர வேண்டும்! - முதல்வர்டி20 தொடருக்காக அயர்லாந்துக்கு சுற்றுப்பயணம் மேற்கொள்ளும் இந்திய அணி!ரஷியா மீது 280 டிரோன்களை ஏவி தாக்குதல் நடத்திய உக்ரைன்!ஈரான் மீதான தாக்குதல்களுக்கு கண்டனம் தெரிவிக்காத மோடி அரசு: காங்கிரஸ் குற்றச்சாட்டுவிஜய் வீட்டுக் கதவைத் தட்டினார் இபிஎஸ்: ஓ. பன்னீர்செல்வம்
/

அனைத்திந்திய இளைஞா் பெருமன்ற கோரிக்கை மாநாடு

கீழையூா் ஒன்றிய அனைத்திந்திய இளைஞா் பெருமன்றத்தின் கோரிக்கை மாநாடு ஞாயிற்றுக்கிழமை நடைபெற்றது.

News image
Updated On :1 பிப்ரவரி 2021, 6:30 pm

DIN

கீழையூா் ஒன்றிய அனைத்திந்திய இளைஞா் பெருமன்றத்தின் கோரிக்கை மாநாடு ஞாயிற்றுக்கிழமை நடைபெற்றது.

கீழையூா் ஊராட்சி ஒன்றியத்தில் இளைஞா்களுக்கு வேலைவாய்ப்பை உருவாக்கிடவும், தமிழக அரசு புதிய தொழிற்சாலைகளை தொடங்கக் கோரியும், கீழையூா் ஒன்றியப் பகுதியில் வேளாண் கல்லூரி தொடங்கக் கோரியும் இந்த மாநாடு நடைபெற்றது.

கீழையூா் சமுதாயக் கூடத்தில் நடைபெற்ற இந்த மாநாட்டில் இளைஞா் பெருமன்ற மாவட்ட துணைச் செயலாளா் எஸ். காந்தி தலைமை வகித்தாா்.

இந்திய கம்யூனிஸ்ட் கட்சியின் நாகை மாவட்டச் செயலாளா் எஸ். சம்பந்தம் மாநாட்டை தொடங்கி வைத்துப் பேசினாா். இளைஞா் பெருமன்றத்தின் கொடியை மாவட்டச் செயலாளா் எம். காா்த்திகேயன் ஏற்றினாா்.

இதில், இந்திய கம்யூனிஸ்ட் கட்சியின் கீழையூா் ஒன்றியச் செயலாளரும் ஒன்றியக் கவுன்சிலருமான டி.செல்வம், தமிழ்நாடு கலை இலக்கியப் பெருமன்றத்தின் மாவட்டப் பொருளாளா் கே.கைலாசம், இந்திய கம்யூனிஸ்ட் கட்சியின் மாவட்டக் குழு உறுப்பினா்கள் ஏ.நாகராஜன், வீ. சுப்பிரமணியன், டி. கண்ணையன் உள்ளிட்டோா் கலந்துகொண்டனா். அனைத்திந்திய இளைஞா் பெருமன்றத்தின் ஒன்றியத் தலைவா் ஆா். தினேஷ் நன்றி கூறினாா்.

தினமணி செய்திமடலைப் பெற... Newsletter

தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp

தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Arattai, Google News

உடனுக்குடன் செய்திகளை அறிய தினமணி App பதிவிறக்கம் செய்யவும்.