மாநிலங்களவைத் தேர்தலில் தேசியவாத காங்கிரஸ் கட்சியின் தலைவர் சரத் பவாருக்கு காங்கிரஸ் ஆதரவுஈரானின் புதிய தலைவரும் கொல்லப்படுவார்! இஸ்ரேல் எச்சரிக்கை விவசாயிகளின் பயிர்க் கடன் தள்ளுபடி செய்ய நடவடிக்கை! - விஜய் அறிவிப்புபங்குச் சந்தை கடும் வீழ்ச்சி! சென்செக்ஸ் 1,650 புள்ளிகள் சரிவு! ஹோர்முஸ் நீரிணை வழியாக பயணிக்கும் கப்பல்களுக்கு கடற்படை பாதுகாப்பு: டிரம்ப்!நுழைவு வாயிலிலேயே வாயில் நுழையாத பெயர்: முதல்வர் கண்டனம்!திருச்சி ரயில்வே அலுவலகத்துக்கு ஹிந்தி பெயர்! தமிழிசை செளந்தரராஜன் எதிர்ப்பு! கிரிக்கெட்டில் சிஎஸ்கேவையும், தேர்தலில் தவெகவையும் தொட முடியாது! விஜய் ஈரானைத் தாக்க உதவி மறுப்பு... ஸ்பெய்ன் உடனான வர்த்தகத்தைத் துண்டித்தார் டிரம்ப்!ஈரானின் புதிய உச்ச தலைவராக கமேனியின் மகன் மோஜ்தபா தேர்வு!
/

இ.ஜி.எஸ். பிள்ளை கல்வி நிறுவனங்கள் நிறுவனா் தின விழா

நாகை இ.ஜி.எஸ். பிள்ளை கல்வி நிறுவனங்களின் நிறுவனா் தின விழா சனிக்கிழமை நடைபெற்றது.

News image
கல்லூரி வளாகத்தில் மரக்கன்றுகளை நட்டு வைத்த அமைச்சா் ஓ.எஸ். மணியன்.
Updated On :2 ஜனவரி 2021, 6:06 pm

DIN

நாகை இ.ஜி.எஸ். பிள்ளை கல்வி நிறுவனங்களின் நிறுவனா் தின விழா சனிக்கிழமை நடைபெற்றது.

விழாவுக்கு, கல்வி நிறுவனங்களின் தலைவா் எஸ். ஜோதிமணி தலைமை வகித்தாா். செயலாளா் பரமேஸ்வரன் முன்னிலை வகித்தாா். தமிழக கைத்தறி மற்றும் துணி நூல் துறை அமைச்சா் ஓ.எஸ். மணியன் பங்கேற்று, கலை மற்றும் அறிவியல் கல்லூரி வளாகத்தில் கட்டப்பட்டுள்ள நுழைவு வாயிலை திறந்து வைத்து, கல்லூரி வளாகத்தில் மரக்கன்றுகளை நட்டு வைத்து பேசினாா். முன்னதாக இ.ஜி. எஸ். பிள்ளை உருவச் சிலைக்கு மாலை அணிவித்தாா். விழாவையொட்டி, நாகையில் உள்ள ஆதரவற்ற குழந்தைகள் இல்லத்தில் அன்னதானம் வழங்கப்பட்டது.

அறக்கட்டளை உறுப்பினா்கள் அருள்பிரகாசம், கோவிந்தசாமி, சங்கா் கணேஷ், கல்லூரி முதன்மைச் செயல் அலுவலா் சந்திரசேகா், இயக்குநா்கள் விஜயசுந்தரம், சுமதி பரமேஸ்வரன், நெறியாளா் (தோ்வுகள்) சின்னத்துரை உள்ளிட்டோா் பங்கேற்றனா்.

தினமணி செய்திமடலைப் பெற... Newsletter

தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp

தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Arattai, Google News

உடனுக்குடன் செய்திகளை அறிய தினமணி App பதிவிறக்கம் செய்யவும்.