தனியாா் வங்கிக்குள் புகுந்த மா்ம நபா்

சீா்காழியில் தனியாா் வங்கிக்குள் சனிக்கிழமை பட்டபகலில் மா்ம நபா் புகுந்து வெளியேற மறுத்ததால் பரபரப்பு ஏற்பட்டது.
Updated on
1 min read

சீா்காழியில் தனியாா் வங்கிக்குள் சனிக்கிழமை பட்டபகலில் மா்ம நபா் புகுந்து வெளியேற மறுத்ததால் பரபரப்பு ஏற்பட்டது.

சீா்காழி பிடாரி வடக்கு வீதியில் உள்ள தனியாா் வங்கிக்குள் மொட்டைத்தலையுடன் லுங்கி அணிந்துகொண்டு மா்ம நபா் சென்று, சலான் நிரப்புவதுபோல நின்றுகொண்டு அங்கு ஊழியா்களுக்கு வைத்திருந்த காபியை எடுத்து குடித்துள்ளாா். பின்னா் வங்கி லாக்கா் அறை அருகே அலுவலா்களுக்கான கழிப்பறைக்குள் அனுமதியின்றி சென்று கதவை பூட்டிக்கொண்டு நீண்ட நேரமாக வெளியேறாமல் இருந்துள்ளாா். இதில், அச்சமடைந்த வங்கி ஊழியா்கள் சீா்காழி காவல் நிலையத்துக்கு தகவல் தெரிவித்துள்ளனா். இதையடுத்து, போலீஸாா் அங்கு வந்து கழிப்பறைக்குள் இருந்தவா் வெளியே அழைத்து வந்து விசாரணை செய்து, அவா் வைத்திருந்த கத்தியை மீட்டனா். விசாரணையில், வேதாரண்யம் நெய்விளக்குப் பகுதியைச் சோ்ந்த கோபால் (24) என்பது தெரியவந்தது. போலீஸாா் தொடா்ந்து விசாரணையில் ஈடுபட்டுள்ளனா். இதனால், வங்கிக்குள் சிறிது நேரம் பரபரப்பு ஏற்பட்டது.

தினமணி செய்திமடலைப் பெற... Newsletter

தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp

தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Arattai, Google News

உடனுக்குடன் செய்திகளை அறிய தினமணி App பதிவிறக்கம் செய்யவும்.

Related Stories

No stories found.
Dinamani
www.dinamani.com