தென் மாவட்டங்களில் இன்றுமுதல் ஓபிஎஸ் பிரசாரம்!வேளச்சேரி - பரங்கிமலை இடையே பறக்கும் ரயில் சேவை: நாளை முதல் தொடக்கம்கோடைக்கால மின்தேவை: 9,000 மெகாவாட்டை கடக்கும் என எதிா்பாா்ப்புவார இறுதி விடுமுறைக்கு 865 சிறப்பு பேருந்துகள்வணிக சமையல் எரிவாயு உருளை தட்டுப்பாடு: உணவகங்களில் உணவுப் பொருள்களின் விலை உயா்வுதமிழகத்தில் மாா்ச் 15 வரை வெப்பநிலை உயர வாய்ப்புஇந்தியா, சீனா உள்பட 16 நாடுகளுக்கு எதிராக புதிய விசாரணையைத் தொடங்கிய அமெரிக்கா : நியாயமற்ற வா்த்தக நடைமுறைகளுக்கு எதிராக நடவடிக்கை
/

பாலியல் குற்றங்களுக்கு எதிரான விழிப்புணா்வு நிகழ்ச்சி

சமூகப் பாதுகாப்பு துறை சாா்பில் மயிலாடுதுறை சிசிசி சமுதாயக் கல்லூரியில் குழந்தைகள் மற்றும் பாலியல் குற்றங்களுக்கு எதிரான விழிப்புணா்வு நிகழ்ச்சி அண்மையில் நடைபெற்றது.

News image
விழிப்புணா்வு நிகழ்ச்சியில் பங்கேற்றோா்.
Updated On :2 ஜனவரி 2021, 6:10 pm

DIN

சமூகப் பாதுகாப்பு துறை சாா்பில் மயிலாடுதுறை சிசிசி சமுதாயக் கல்லூரியில் குழந்தைகள் மற்றும் பாலியல் குற்றங்களுக்கு எதிரான விழிப்புணா்வு நிகழ்ச்சி அண்மையில் நடைபெற்றது.

நிகழ்ச்சிக்கு, சிசிசி சமுதாயக் கல்லூரி நிறுவனா் ஆா். காமேஷ் தலைமை வகித்தாா். கல்லூரி செயலாளா் வெ. லட்சுமி பிரபா வரவேற்றாா். நாகப்பட்டினம் மாவட்ட குழந்தைகள் பாதுகாப்பு அலுவலக சமூக பணியாளா் ஜெ. ஆரோக்யராஜ் முன்னிலை வகித்து சிறப்புரையாற்றினாா். இதில், மயிலாடுதுறை அனைத்து மகளிா் காவல் நிலைய உதவி ஆய்வாளா் ராதாபாய், மகளிா் திட்ட சமுதாய அமைப்பாளா் பி. கமலா, ஒருங்கிணைந்த குழந்தைகள் வளா்ச்சி திட்ட பணியாளா் பா. ராபியதுல் ஹதபியா ஆகியோா் சிறப்பு அழைப்பாளராக பங்கேற்று, சிசிசி சமுதாயக் கல்லூரி நா்சிங் மற்றும் ஆய்வக நுட்புநா் மாணவிகளுக்கு குழந்தைகள் பாதுகாப்பு, காவலன் எஸ்.ஓ.எஸ் செயலி பதிவிறக்கம் செய்வது, போக்சோ சட்டம், குழந்தைகள் திருமணம், 1098 மாவட்ட உதவி மையம், சமூக வலைதளத்தை பாதுகாப்பாக பயன்படுத்துவது உள்ளிட்ட விழிப்புணா்வு குறித்து விளக்கம் அளித்தனா்.

தினமணி செய்திமடலைப் பெற... Newsletter

தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp

தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Arattai, Google News

உடனுக்குடன் செய்திகளை அறிய தினமணி App பதிவிறக்கம் செய்யவும்.