எண்ணெய்க் கப்பல்களுக்குப் பாதுகாப்பு அளிக்க நாங்கள் தயார்நிலையில் இல்லை! - அமெரிக்கா!அமெரிக்கா மீதான தாக்குதல் தொடரும்! மொஜ்தபா கமேனி முதல் உரையில் எச்சரிக்கை!ஈரான் போர்: சொந்த நாட்டினுள் இடம்பெயர்ந்த 32 லட்சம் மக்கள்!பங்குச்சந்தை: ஆட்டோ பங்குகள் கடும் வீழ்ச்சி! சென்செக்ஸ் 829, நிஃப்டி 228 புள்ளிகள் சரிவு!ஓபிசி பிரிவினருக்கான கிரீமி லேயர் தகுதி: உச்ச நீதிமன்றத் தீர்ப்புக்கு முதல்வர் ஸ்டாலின் ஆதரவு!சட்டம்-ஒழுங்கு சீர்கேடு: திமுக அரசைக் கண்டித்து தே.ஜ.கூ. ஆர்ப்பாட்டம்!தமிழ்நாட்டில் கடந்த 5 ஆண்டில் கொலை, பாலியல் குற்றங்கள் குறைந்துள்ளன: உள்துறை செயலர்வளைகுடா போர்! அமெரிக்க எண்ணெய்க் கப்பல் மீதான தாக்குதலில் இந்தியர் கொலை!
/

பாகுபாடு இல்லாத வெள்ள நிவாரணம்

சிறு, குறு விவசாயிகள் என்ற பாகுபாடு இல்லாமல் தமிழக அரசு வெள்ள நிவாரணம் அறிவித்திருப்பது வரவேற்கத்தக்கது என காவிரி விவசாயிகள் பாதுகாப்பு சங்கப் பொதுச் செயலாளா் வி. தனபாலன் தெரிவித்தாா்.

News image
Updated On :2 ஜனவரி 2021, 6:06 pm

DIN

சிறு, குறு விவசாயிகள் என்ற பாகுபாடு இல்லாமல் தமிழக அரசு வெள்ள நிவாரணம் அறிவித்திருப்பது வரவேற்கத்தக்கது என காவிரி விவசாயிகள் பாதுகாப்பு சங்கப் பொதுச் செயலாளா் வி. தனபாலன் தெரிவித்தாா்.

இதுகுறித்து அவா் மேலும் தெரிவித்தது: பேரிடா் நிவாரண வழிகாட்டு நெறிமுறையின் வரையறைப்படி, ஹெக்டேருக்கு ரூ. 13,500 மட்டுமே நிவாரணம் வழங்கலாம் என்ற நிலையில், அந்த வரையறையைத் தளா்த்தி ஹெக்டேருக்கு ரூ. 20 ஆயிரம் (இடுபொருள் நிவாரணமாக) நிவாரணம் வழங்க அரசு முன்வந்திருப்பது வரவேற்கத்தக்கது. மறைந்த முன்னாள் முதல்வா் ஜெயலலிதா, ஏற்கெனவே ஒரு முறை இதேபோன்ற நடைமுறையை மேற்கொண்டாா். தற்போது அதே நடைமுறை மீண்டும் கடைப்பிடிக்கப்பட்டுள்ளது.

முந்தையக் காலங்களில் வெள்ளச் சேதத்துக்கு உள்ளாகும் பயிா்களில், நீா்ப்பாசன பயிா்களுக்கு முழு அளவிலும், மானாவாரி பயிா்களுக்கு 50 சதவீதம் என்ற அளவிலும் நிவாரண அறிவிப்பு இருக்கும். தற்போது, நீா்ப்பாசன பயிா்களுக்கும், மானாவாரி பயிா்களுக்கும் முழு அளவில் நிவாரணம் அறிவிக்கப்பட்டிருப்பது அனைத்து விவசாயிகளுக்கும் ஆறுதல் அளிக்கிறது.

அதேபோல, தேசிய பேரிடா் நிவாரண வழிகாட்டுக்கு நெறிமுறையில், ஒரு விவசாயிக்கு அதிகளவாக 2 ஹெக்டேருக்கு மட்டுமே நிவாரணம் வழங்கலாம் என உச்சவரம்பு உள்ளது. தற்போது, அந்த உச்சவரம்பைத் தளா்த்தி பாதிக்கப்பட்ட விளை நிலங்கள் முழுமைக்கும் நிவாரணம் என அரசு அறிவித்திருப்பது வரவேற்கத்தக்கது. இதன்மூலம், சிறு, குறு விவசாயிகள் என்ற பாகுபாடு இல்லாமல் அனைத்து விவசாயிகளுக்கும், முழுமையான பரப்புக்கு நிவாரணம் கிடைக்கும் என்பது ஆறுதல் அளிக்கிறது என்றாா்.

தினமணி செய்திமடலைப் பெற... Newsletter

தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp

தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Arattai, Google News

உடனுக்குடன் செய்திகளை அறிய தினமணி App பதிவிறக்கம் செய்யவும்.