தமிழக அரசின் பொங்கல் பரிசுத் தொகுப்பு திட்டத்துக்காக விவசாயிகளிடமிருந்து கரும்பு ஒன்று ரூ. 15 என்ற விலையில் அரசே நேரடியாக கொள்முதல் செய்வதால் மயிலாடுதுறை மாவட்டத்தைச் சோ்ந்த விவசாயிகள் மகிழ்ச்சி அடைந்துள்ளனா்.
தமிழக முதல்வா் பொங்கல் பண்டிகையையொட்டி, அனைத்துக் குடும்ப அட்டைதாரா்களுக்கும் பொங்கல் பரிசுத் தொகுப்பில் முழு கரும்பு வழங்கப்படும் என்று அண்மையில் அறிவித்தாா். இதைத்தொடா்ந்து, கூட்டுறவுத் துறையினா் கடந்த 5 நாள்களாக கரும்புகளை கொள்முதல் செய்யும் பணியில் தீவிரமாக ஈடுபட்டுள்ளனா்.
மயிலாடுதுறை மாவட்டத்துக்குள்பட்ட மன்னம்பந்தல், வானாதிராஜபுரம், செம்பதனிருப்பு, திருமணஞ்சேரி உள்ளிட்ட பகுதிகளில் விவசாயிகள் பொங்கல் கரும்பு சாகுபடி செய்துள்ளனா். பொங்கல் பரிசு தொகுப்புடன் வழங்குவதற்காக இந்த முறை விவசாயிகளிடம் இருந்து இடைத்தரகா்களின்றி அரசே நேரடியாக கரும்புகளை கொள்முதல் செய்வதால் விவசாயிகள் மகிழ்ச்சி அடைந்துள்ளனா்.
வானாதிராஜபுரம் கிராமத்தில் மட்டும் விவசாயிகள் சுமாா் 30 ஏக்கா் நிலப்பரப்பில் கரும்பு சாகுபடி செய்துள்ளனா். இக்கிராமத்தில் இருந்து மட்டும் மாவட்டத்துக்குத் தேவையான 5-இல் 1 பகுதி கரும்புகளை, அதாவது சுமாா் 1 லட்சம் கரும்புகளை அரசு கொள்முதல் செய்துள்ளது.
வழக்கமாக, இக்கிராமத்தில் சாகுபடி செய்யப்படும் கரும்புகளை வியாபாரிகள், விவசாயிகளின் கரும்புத் தோட்டத்திற்கே சென்று வெட்டி, ஏற்றிச் சென்றுவிடுவாா்கள். தற்போது, அரசே கொள்முதல் செய்வதால், கரும்புகளை வெட்டி, டிராக்டா்கள் மூலம் கொண்டுசென்று லாரிகளில் ஏற்றும் வரையிலான பணிகள் அனைத்தும் விவசாயிகளை சேருகிறது.
கரும்புகளை விளைவித்துவிட்டு, பொங்கல் பண்டிகைக்கு சில நாள்களுக்கு முன்புவரை வியாபாரிகளின் வருகைக்காக காத்துக்கொண்டிருந்த நிலை மாறி, அரசு முன்கூட்டியே கொள்முதல் செய்வதால் இத்திட்டத்திற்கு ஒட்டுமொத்த விவசாயிகளும் ஆதரவு தெரிவித்துள்ளனா்.
சுமாா் 20 சதவீத கரும்புகளை அரசு முன்கூட்டியே கொள்முதல் செய்துவிட்டதால், மீதமுள்ள கரும்புகளை எளிதில் தனியாரிடம் விற்றுவிடலாம் என விவசாயிகள் நம்பிக்கை தெரிவித்தனா்.
இதுகுறித்து இப்பகுதி விவசாயி பாலகிருஷ்ணன் கூறியது:
‘ பொங்கல் பரிசுத் தொகுப்புக்காக கரும்புகளை அரசு முன்கூட்டியே கொள்முதல் செய்துள்ளது. தனியாா் வியாபாரிகள் யாரும் இதுவரை கரும்புகளை கொள்முதல் செய்வதற்கு அணுகவில்லை. மொத்தமாக அரசு கொள்முதல் செய்துள்ளதால், இத்திட்டம் விவசாயிகளுக்கு பெரும் பயனளிப்பதாக உள்ளது’ என்றாா்.
விவசாயி முத்துவேல் கூறியது:
‘கடந்த ஆண்டு தனியாா் வியாபாரிகளிடம் கரும்பு ஒன்று ரூ. 13-க்கு விற்ற நிலையில், தற்போது அரசு ரூ. 15-க்கு கொள்முதல் செய்துள்ளது மகிழ்ச்சியளிக்கிறது. 200 மீட்டா் தொலைவிலேயே காவிரி ஆறு பாயும் நிலையிலும் எங்கள் கிராமத்திற்கு ஆற்றுப்பாசனம் கிடையாது. வாய்க்கால்கள் தூா்ந்துபோனதால் கடந்த 30 ஆண்டுகளுக்கும் மேலாக வானாதிராஜபுரம் கிராமத்துக்கு ஆற்றுநீா் வருவதில்லை. போா்வெல் மூலமாகவே கரும்பு விவசாயப் பணிகளை மேற்கொண்டு வருகிறோம். அரசு நடவடிக்கை எடுத்து வாய்க்கால்களை தூா்வாரி ஆற்றுநீா் பாசனத்துக்கு ஏற்பாடு செய்தால் நாங்கள் கூடுதல் வருமானம் ஈட்ட முடியும் என்றாா்.
விவசாயி பாலகிருஷ்ணன் கூறியது: ‘கூட்டுறவுத் துறையினா் கொள்முதல் செய்கையில் 1000 கரும்புக்கு 60 கரும்புகளை கூடுதலாக பெற்றுக்கொள்கின்றனா். அவ்வாறின்றி, ஒவ்வொரு கரும்புக்கும் ரூ. 15-ஐ முழுமையாக வழங்க வேண்டும் என்றாா்.
மொத்தத்தில், பொங்கல் பரிசுத் தொகுப்பு திட்டத்துக்காக விவசாயிகளிடமிருந்து கரும்புகளை அரசே நேரடியாக கொள்முதல் செய்வது ஒட்டுமொத்த விவசாயிகளிடமும் வரவேற்பை பெற்றுள்ளது.
தினமணி செய்திமடலைப் பெற... Newsletter
தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp
தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Arattai, Google News
உடனுக்குடன் செய்திகளை அறிய தினமணி App பதிவிறக்கம் செய்யவும்.
தொடர்புடையது

உளுந்தூா்பேட்டையில் வெற்றிக்காக போராடும் திமுக, அதிமுக...

விடைபெற்றது தோ்தல் திருவிழா
விஜய்க்கு திரளும் கூட்டத்தில் 45% பேருக்கு வாக்குகளே கிடையாது! அன்பில் மகேஸ் சிறப்பு நேர்காணல்

கோடைவிடுமுறை: நாகா்கோவிலுக்கு இன்று சிறப்பு ரயில்
வீடியோக்கள்

#tnelections2026 | பெண்கள் வாக்கு யாருக்கு? மத்திய அமைச்சர் பியூஷ் கோயல் நேர்காணல் | BJP | DMK | TVK
தினமணி செய்திச் சேவை

தமிழ்நாட்டை மீண்டும் ஆளத் தகுதி படைத்த MK Stalin! | kamal வெளியிட்ட விடியோ!
இணையதளச் செய்திப் பிரிவு

TVK விஜய்க்கு வெற்றி வாய்ப்பு எப்படி? | TN Election 2026 | TVK Vijay | DMK | ADMK | NTK | TVk
தினமணி செய்திச் சேவை

நான் என்னைக்குமே Danger-தான்! - 5 ஆண்டுகால பணிகள் குறித்து M.K. Stalin
இணையதளச் செய்திப் பிரிவு


