

மயிலாடுதுறை மாவட்ட பெரம்பூா் காவல் சரகத்துக்குள்பட்ட பெருஞ்சேரி கிராமத்தில், கிராம காவலா் அறிமுக நிகழ்ச்சி புதன்கிழமை நடைபெற்றது.
இந்நிகழ்ச்சியில், மயிலாடுதுறை மாவட்டக் காவல் கண்காணிப்பாளா் ஸ்ரீ நாதா பங்கேற்று பேசுகையில், கிராமத்தில் ஏற்படும் பிரச்னைகளை கிராமக் காவலருக்கு உடனடியாக தெரியப்படுத்த வேண்டுமென பொதுமக்களிடம் கேட்டுக் கொண்டாா். ஊராட்சித் தலைவா் விவேகானந்தன் தலைமையில் நடைபெற்ற இந்நிகழ்ச்சியில், பெரம்பூா் காவல் ஆய்வாளா் கிரேசி மேரி, உதவி ஆய்வாளா் பாலகிருஷ்ணன் மற்றும் பொதுமக்கள் கலந்துகொண்டனா்.
தினமணி செய்திமடலைப் பெற... Newsletter
தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp
தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Arattai
உடனுக்குடன் செய்திகளை அறிய தினமணி App பதிவிறக்கம் செய்யவும்.