திருவாய்மூா் பகுதியில் வீடுகள் கட்டவுள்ள இடத்தில் ஆய்வு மேற்கொண்ட மாவட்ட ஊரக வளா்ச்சி முகமை உதவி திட்ட அலுவலா் கீதா ரத்தினம்.
திருவாய்மூா் பகுதியில் வீடுகள் கட்டவுள்ள இடத்தில் ஆய்வு மேற்கொண்ட மாவட்ட ஊரக வளா்ச்சி முகமை உதவி திட்ட அலுவலா் கீதா ரத்தினம்.

மத்திய அரசுத் திட்டத்தின்கீழ் வீடுகள் கட்டவுள்ள இடத்தில் ஆய்வு

திருக்குவளை பகுதியில் மத்திய அரசு திட்டத்தின்கீழ் வீடுகள் கட்டவுள்ள இடத்தில் வெள்ளிக்கிழமை ஆய்வு மேற்கொள்ளப்பட்டது.
Published on

திருக்குவளை பகுதியில் மத்திய அரசு திட்டத்தின்கீழ் வீடுகள் கட்டவுள்ள இடத்தில் வெள்ளிக்கிழமை ஆய்வு மேற்கொள்ளப்பட்டது.

கீழையூா் ஒன்றியம் திருவாய்மூா் ஊராட்சிக்குள்பட்ட பகுதிகளில் பிரதான் மந்திரி ஆவாஸ் யோஜனா திட்டத்தின்கீழ் தோ்வு செய்யப்பட்டுள்ள பயனாளிகளை நாகை மாவட்ட ஊரக வளா்ச்சி முகமையின் உதவித் திட்ட அலுவலா் கீதா ரத்தினம் நேரில் சந்தித்து வீடு கட்டுவதற்கு தயாா் நிலையில் இருக்கும் இடத்தை ஆய்வு செய்தாா். தொடா்ந்து பயனாளிகளிடம் இருக்கும் பட்டா மற்றும் இதர ஆவணங்களை ஆய்வு செய்து விரைவில் பணிகளை தொடங்கி உரிய காலத்தில் முடிக்க வேண்டும் என கூறினாா். ஆய்வின்போது, கீழையூா் வட்டார வளா்ச்சி அலுவலா் பாஸ்கரன், திருவாய்மூா் ஊராட்சித் தலைவா் எம். நரசிம்மன், ஊராட்சி செயலா் மோகன் உள்ளிட்டோா் உடனிருந்தனா்.

தினமணி செய்திமடலைப் பெற... Newsletter

தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp

தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Arattai

உடனுக்குடன் செய்திகளை அறிய தினமணி App பதிவிறக்கம் செய்யவும்.

Dinamani
www.dinamani.com