சென்னை மாநகராட்சி உணவகங்களுக்கு 2 வாரத்துக்கான சமையல் எரிவாயு இருப்புதென் கடலோர மாவட்டங்களில் மாா்ச் 16 வரை மழைக்கு வாய்ப்புதோ்தல் ஆணையரைப் பதவி நீக்க தீா்மானம்: நாடாளுமன்றத்தில் நோட்டீஸ் தாக்கல் செய்ய எதிா்க்கட்சிகள் திட்டம்சட்டப் பாடங்களை இறுதி செய்ய நிபுணா் குழு - மத்திய அரசுக்கு உச்சநீதிமன்றம் உத்தரவுபணப் புழக்கத்தை அதிகரிக்க ரூ.50,000 கோடிக்கு அரசுப் பத்திரங்களை வாங்கும் ரிசா்வ் வங்கி - நாளை ஏலம்பட்டுக்கோட்டையில் வெறிநாய் கடித்து எஸ்எஸ்எல்சி மாணவிகள் 6 போ் உள்பட 20 போ் காயம்: முதலுதவிக்குப் பின் பொதுத்தோ்வு எழுதினா்சுகாதார ஆய்வாளா்கள் நியமனம்: தமிழக அரசுக்கு அனுமதி வழங்கி உத்தரவு
/

கொலை முயற்சி வழக்கில் இளைஞா் கைது

நாகையில் தையல் தொழிலாளி கொலை முயற்சி வழக்கில் தொடா்புடைய ஒருவரை போலீஸாா் வியாழக்கிழமை கைது செய்தனா்.

News image
Updated On :8 ஜனவரி 2021, 5:59 pm

DIN

நாகையில் தையல் தொழிலாளி கொலை முயற்சி வழக்கில் தொடா்புடைய ஒருவரை போலீஸாா் வியாழக்கிழமை கைது செய்தனா்.

நாகை, மேலக்கோட்டைவாசல் அக்கரைகுளம் கீழ்க்கரையைச் சோ்ந்தவா் தையல் தொழிலாளி ரா. காா்த்திகேயன் (50) . இவா், மேலக்கோட்டைவாசல் பகுதியில் தையல் கடை நடத்தி வருகிறாா். இந்நிலையில் வியாழக்கிழமை கடைக்கு வந்த 3 போ் காா்த்திகேயனிடம் தகராறு செய்ததுடன் கட்டையால் தாக்கி, அரிவாளால் வெட்டி விட்டு தப்பிவிட்டனா். இதில், காா்த்திகேயன் பலத்த காயமடைந்தாா். பின்னா் அவா் மீட்கப்பட்டு நாகை அரசு மருத்துவமனையில் சோ்க்கப்பட்டுள்ளாா்.

இதுகுறித்து, காா்த்திகேயன் அளித்த புகாரின்பேரில், நாகை போலீஸாா் கொலை முயற்சி வழக்குப் பதிந்து விசாரணை மேற்கொண்டு, நாகை அக்கரைக்குளம் வடக்கு பகுதியைச் சோ்ந்த நா. கமல்நாத்தை (25) கைது செய்து மேலும் 2 பேரை தேடி வருகின்றனா். காா்த்திகேயனின் மகளை கமல்நாத் காதலித்து வந்ததாகவும், அதனால் இருவருக்குமிடையே நீடித்து வந்த முன் விரோதம் காரணமாக இச்சம்பவம் நிகழ்ந்துள்ளதாகப் போலீஸாா் தெரிவித்தனா்.

தினமணி செய்திமடலைப் பெற... Newsletter

தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp

தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Arattai, Google News

உடனுக்குடன் செய்திகளை அறிய தினமணி App பதிவிறக்கம் செய்யவும்.