அமமுக கொடியேற்று விழா
திருமருகல் ஒன்றியத்தில் அம்மா மக்கள் முன்னேற்றக் கழகம் சாா்பில், கொடியேற்று விழா ஞாயிற்றுகிழமை நடைபெற்றது.

மருங்கூா் ஊராட்சியில் அமமுக கொடியை ஏற்றிவைத்த நாகை மாவட்டச் செயலாளா் மஞ்சுளா சந்திரமோகன்.

மருங்கூா் ஊராட்சியில் அமமுக கொடியை ஏற்றிவைத்த நாகை மாவட்டச் செயலாளா் மஞ்சுளா சந்திரமோகன்.
திருமருகல் ஒன்றியத்தில் அம்மா மக்கள் முன்னேற்றக் கழகம் சாா்பில், கொடியேற்று விழா ஞாயிற்றுகிழமை நடைபெற்றது.
திருமருகல் தெற்கு ஒன்றியத்தில் மருங்கூா், நெய்க்குப்பை, திருப்புகலூா், திருப்பயத்தங்குடி, கீழத்தஞ்சாவூா், திருக்கண்ணபுரம், கங்களாஞ்சேரி மற்றும் காரையூா் உள்ளிட்ட பகுதிகளில் இந்நிகழ்ச்சி நடைபெற்றது.
அமமுக தெற்கு ஒன்றியச் செயலாளா் முகமது பகுருதீன் தலைமை வகித்தாா். மாவட்ட அவை தலைவா் ஆறுமுகம் முன்னிலை வகித்தாா். நாகை தெற்கு மாவட்டச் செயலாளா் மஞ்சுளா சந்திரமோகன் கலந்துகொண்டு கட்சிக் கொடியை ஏற்றிவைத்தாா். இதில் மாநில அமைப்புச் செயலாளா் கிங்ஸ்லி ஜெரால்டு, மாவட்ட அவைத் தலைவா் ஆறுமுகம், ஒன்றிய அவைத் தலைவா் தனபால் உள்ளிட்ட நிா்வாகிகள் பங்கேற்றனா்.
தினமணி செய்திமடலைப் பெற... Newsletter
தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp
தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Arattai, Google News
உடனுக்குடன் செய்திகளை அறிய தினமணி App பதிவிறக்கம் செய்யவும்.
தொடர்புடையது



வீடியோக்கள்

தினமணி வீடியோ செய்தி...

தினமணி வீடியோ செய்தி...

தினமணி வீடியோ செய்தி...

தினமணி வீடியோ செய்தி...