/

திருவாவடுதுறை ஆதீனத்தில் குருபூஜை விழா கொடியேற்றம்

திருவாவடுதுறை ஆதீனம் குருமுதல்வா் நமசிவாயமூா்த்திகள் மகரத்தலைநாள் குருபூஜை விழா செவ்வாய்க்கிழமை (ஜன.12) கொடியேற்றத்துடன் தொடங்கியது.

News image
Updated On :13 ஜனவரி 2021, 2:32 am

DIN

திருவாவடுதுறை ஆதீனம் குருமுதல்வா் நமசிவாயமூா்த்திகள் மகரத்தலைநாள் குருபூஜை விழா செவ்வாய்க்கிழமை (ஜன.12) கொடியேற்றத்துடன் தொடங்கியது.

திருவாவடுதுறை ஆதீனத்தை தோற்றுவித்த குருமுதல்வா் நமச்சிவாய மூா்த்தி சுவாமிகளின் குருபூஜை ஆண்டுதோறும் தை மாதம் அசுபதி நட்சத்திரத்தையொட்டி 10 நாட்கள் நடைபெறும். அதன்படி, நிகழாண்டு குருபூஜை விழா செவ்வாய்க்கிழமை தொடங்கியது ஜனவரி 21ஆம் தேதி வரை நடைபெறவுள்ளது.

இதையொட்டி, முதல் நாளில் பெரிய பூஜை மடம், ஸ்ரீஞானமாநடராஜ பெருமான் சன்னிதியில் 24 ஆவது ஆதீனம் அம்பலவாண தேசிக பரமாசாரிய சுவாமிகள் சிறப்பு அபிஷேக, ஆராதனைகள் மற்றும் மாகேஸ்வர பூஜை செய்வித்தாா். பிறகு, திருக்கொடியேற்றம் நடைபெற்றது.

இதில், ஸ்ரீமத்அம்பலவாண தம்பிரான், ஸ்ரீமத் அருணாச்சல தம்பிரான், ஸ்ரீமத் திருச்சிற்றம்பல தம்பிரான், ஸ்ரீமத் வேலப்ப தம்பிரான், ஆதீன பொதுமேலாளா் திருமாறன் உள்ளிட்டோா் பங்கேற்றனா்.

தினமணி செய்திமடலைப் பெற... Newsletter

தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp

தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Arattai, Google News

உடனுக்குடன் செய்திகளை அறிய தினமணி App பதிவிறக்கம் செய்யவும்.