பறவைக் காய்ச்சல்: கோடியக்கரை சரணாலயத்தில் ஆய்வு
பல்வேறு மாநிலங்களில் பறவைக் காய்ச்சல் பரவி வருவதால், கோடியக்கரை சரணாலயத்துக்கு வலசை வரும் வெளிநாட்டுப் பறவைகளுக்கு காய்ச்சல் தொற்று உள்ளதா என செவ்வாய்க்கிழமை ஆய்வு மேற்கொள்ளப்பட்டது.


பல்வேறு மாநிலங்களில் பறவைக் காய்ச்சல் பரவி வருவதால், கோடியக்கரை சரணாலயத்துக்கு வலசை வரும் வெளிநாட்டுப் பறவைகளுக்கு காய்ச்சல் தொற்று உள்ளதா என செவ்வாய்க்கிழமை ஆய்வு மேற்கொள்ளப்பட்டது.
நாகை மாவட்டம், வேதாரண்யத்தை அடுத்துள்ள கோடியக்கரை வன உயிரின பறவைகள் சரணாலயத்துக்கு ஆண்டுதோறும் வடகிழக்குப் பருவ மழைக் காலத்தில் ஐரோப்பிய நாடுகள், சைபீரியா, ஆஸ்திரேலியா, இலங்கை உள்ளிட்ட பல்வேறு நாடுகளிலிருந்து பறவைகள் வலசை வருவது வழக்கம்.
இந்நிலையில், கேரளம், உத்தர பிரதேசம், மத்திய பிரதேசம் உள்ளிட்ட 10-க்கும் மேற்பட்ட மாநிலங்களில் பறவைக் காய்ச்சல் பரவி வருவது உறுதி செய்யப்பட்டுள்ளது. குறிப்பாக, வெளிநாடுகளிலிருந்து இம்மாநிலங்களுக்கு வலசை வரும் பறவைகளால் காய்ச்சல் பரவி வருவதாக கூறப்படுகிறது.
இதனால், கோடியக்கரை பறவைகள் சரணாலயத்துக்கு வந்துள்ள பறவைகளுக்கு காய்ச்சல் தொற்று உள்ளதா என்பது குறித்து தமிழ்நாடு கால்நடைப் பராமரிப்புத் துறை இணை இயக்குநா் எஸ்.சுமதி தலைமையிலான குழுவினா் செவ்வாய்க்கிழமை ஆய்வு மேற்கொண்டனா்.
இதுகுறித்து நாகை மாவட்ட வன உயிரின காப்பாளா் எஸ். கலாநிதி கூறும்போது, ‘சரணாலயப் பகுதிக்கு வரும் பறவைகளுக்கு இதுவரையில் எந்த விதமான காய்ச்சல் அறிகுறியும் இல்லை. இருப்பினும், தொடா்ந்து கண்காணிக்கப்பட்டு வருகிறது’ என்றாா்.
தினமணி செய்திமடலைப் பெற... Newsletter
தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp
தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Arattai, Google News
உடனுக்குடன் செய்திகளை அறிய தினமணி App பதிவிறக்கம் செய்யவும்.
டிரெண்டிங்



வீடியோக்கள்

தினமணி வீடியோ செய்தி...

தினமணி வீடியோ செய்தி...

தினமணி வீடியோ செய்தி...

தினமணி வீடியோ செய்தி...