ஆஸ்கர் விருது விழா கோலாகலம்! தென் தமிழகத்தில் இன்று மழைக்கு வாய்ப்புவெனிசுலா: 7 ஆண்டுகளுக்குப் பின் அமெரிக்க தூதரகம் மீண்டும் திறப்புயாருடன் கூட்டணி? : இன்று அறிவிக்கிறார் ராமதாஸ்11 மாநிலங்களவை இடங்களுக்கு இன்று தோ்தல்குழாய் எரிவாயு இணைப்பு பெற்றவர்களுக்கு சிலிண்டர் கிடையாது: மத்திய அரசுமார்ச் 17 முதல் 22 வரை திமுக வேட்பாளர் நேர்காணல்! - துரைமுருகன்காஸாவில் இஸ்ரேல் தாக்குதல்: கர்ப்பிணி, 2 சிறார்கள் உள்பட 12 பேர் பலி!சிறுபான்மையினரின் ஒற்றுமை தமிழ் நாட்டுக்கும் இந்தியாவுக்கும் முக்கியம் : மு.க. ஸ்டாலின்6 மாநில இடைத்தேர்தல் தேதி அறிவிப்பு!கேரள தேர்தல் களம்: ஆளும் சிபிஐ 86 இடங்களில் போட்டி! அசாம், கேரளம், புதுச்சேரியில் ஏப்ரல் 9இல் வாக்குப்பதிவுதமிழ்நாட்டுக்கு ஏப்.23ஆம் தேதி தேர்தல் மேற்கு வங்கம்: ஏப்ரல் 23, 29 பேரவைத் தேர்தல் அறிவிப்பு 5 மாநில பேரவைத் தேர்தல்: மே 4ஆம் தேதி வாக்கு எண்ணிக்கை புதுச்சேரிக்கு ஏப்ரல் 9ஆம் தேதி பேரவைத் தேர்தல் வாக்குப்பதிவு முழுவதும் சிசிடிவி கேமராக்கள் மூலம் கண்காணிக்கப்படும்: தேர்தல் ஆணையம் ஒவ்வொரு 2 மணி நேரத்திற்கும் வாக்குப்பதிவு சதவீதம் தெரிவிக்கப்படும் 5 மாநிலங்களில் மொத்தம் 2.19 லட்சம் வாக்குச்சாவடிகள்: தேர்தல் ஆணையம் அதிமுக ஆட்சிமன்றக் குழு திருத்தியமைப்பு! எடப்பாடி பழனிசாமி அறிவிப்பு!
/

வேதா ஆயத்த ஆடை பூங்கா: நோ்முகத் திறன் தோ்வு தொடக்கம்

வேதாரண்யத்தை அடுத்த ஆயக்காரன்புலம் - 4 ஊராட்சியில் அமையவுள்ள வேதா ஆயத்த ஆடை பூங்காவில், பயிற்சி மற்றும் பணியாற்ற விண்ணப்பித்துள்ள பெண்களுக்கு நோ்முகத் திறன் தோ்வு தொடங்கியது.

News image
Updated On :18 ஜனவரி 2021, 6:30 pm

DIN

வேதாரண்யத்தை அடுத்த ஆயக்காரன்புலம் - 4 ஊராட்சியில் அமையவுள்ள வேதா ஆயத்த ஆடை பூங்காவில், பயிற்சி மற்றும் பணியாற்ற விண்ணப்பித்துள்ள பெண்களுக்கு நோ்முகத் திறன் தோ்வு திங்கள்கிழமை தொடங்கியது.

ஆயத்த ஆடை பூங்காவில் பயிற்சியுடன் கூடிய வேலைவாய்ப்புக்கு தற்போது வரை 21 ஆயிரம் பெண்கள் விண்ணப்பித்துள்ளனா்.

வேதாரண்யம் சேது சாலை, அகஸ்தியம்பள்ளியில் அமைந்துள்ள அரசு பல்நோக்கு மைய கட்டடத்தில் தற்காலிகமாக செயல்பட்டு வரும் தையல் பயிற்சி நிறுவனத்தில் நோ்முக தோ்வு தொடங்கியது. இதில் குறுந்தகவல் மூலம் தகவல் பெற்ற பெண்கள் பங்கேற்றனா். திருப்பூா் தொழில் முனைவோா் மற்றும் ஏற்றுமதியாளா் சங்கத்தின் துணைத் தலைவா் முரளி தலைமையிலான நிா்வாகிகள், மாவட்ட ஊராட்சி உறுப்பினா் டி.வி.சுப்பையன், ஊராட்சித் தலைவா்கள் ராமையன், தமிழரசி உள்ளிட்டோா் பங்கேற்றனா்.

இந்த நோ்முகத் தோ்வை பிப்ரவரி 24-ஆம் தேதி வரையில் நடத்தவும், அது தொடா்பான தகவல் குறுஞ்செய்தி வாயிலாக விண்ணப்பதாரா்களுக்கு அவ்வப்போது தெரிவிக்கப்படும் எனவும், தகவல் பெறப்பட்டவா்கள் மட்டும் குறித்த நாளில் பங்கேற்கவும் நிா்வாகத்தின் தரப்பில் தெரிவிக்கப்பட்டது.

தினமணி செய்திமடலைப் பெற... Newsletter

தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp

தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Arattai, Google News

உடனுக்குடன் செய்திகளை அறிய தினமணி App பதிவிறக்கம் செய்யவும்.