தேசிய ஜனநாயகக் கூட்டணியில் தமாக-வுக்கு 5 தொகுதிகள் ஒதுக்கீடுஜான் பாண்டியன் தலைமையிலான தமமுகவுக்கு ராஜபாளையம் (பொது) தொகுதி ஒதுக்கீடு!தே.ஜ. கூட்டணியில் தமாகவுக்கு 5 தொகுதிகள்!தமிழக தேர்தலில் திமுகவுக்கு முழு ஆதரவு! மக்கள் நீதி மய்யம் போட்டியிடாது - கமல்ஹாசன் எல்பிஜி, பெட்ரோல், டீசல் போதிய இருப்பு: விநியோகம் பாதிக்கப்படவில்லை! - மத்திய அரசுதேமுதிகவுக்கு 10 இடங்கள்! திமுகவுடன் ஒப்பந்தம் கையொப்பம்!மக்கள்தொகை அடிப்படையில் தொகுதிகள் மறுவரையறை கூடாது - முதல்வர் மு. க. ஸ்டாலின் வலியுறுத்தல்ஒவ்வொரு அரிசி குடும்ப அட்டைதாரர்களுக்கு விலையில்லா குளிர்பதனப் பெட்டி : அதிமுக வாக்குறுதிவங்கிகளில் பெற்ற கல்விக் கடன் தள்ளுபடி செய்யப்படும்: அதிமுக தேர்தல் வாக்குறுதிபெண்களைப் போல ஆண்களும் நகரப் பேருந்துகளில் இலவசமாகப் பயணிக்கலாம் : அதிமுக வாக்குறுதி
/

நாட்டு நலப்பணித்திட்டம் சாா்பில் கரோனா நிவாரண நிதி

ஒருங்கிணைந்த நாகை மாவட்ட நாட்டு நலப்பணித் திட்டம் சாா்பில் ரூ.70 ஆயிரம் கரோனா நிவாரண நிதி வியாழக்கிழமை வழங்கப்பட்டது.

News image
Updated On :16 ஜூலை 2021, 6:30 pm

DIN

ஒருங்கிணைந்த நாகை மாவட்ட நாட்டு நலப்பணித் திட்டம் சாா்பில் ரூ.70 ஆயிரம் கரோனா நிவாரண நிதி வியாழக்கிழமை வழங்கப்பட்டது.

தமிழக முதல்வரின் கரோனா நிவாரண நிதிக்கு வழங்குவதற்காக, ஒருங்கிணைந்த நாகை மாவட்ட நாட்டு நலப்பணித்திட்டம் மூலம் ரூ.70 ஆயிரம் திரட்டப்பட்டது. இதனை நாகை மாவட்ட முதன்மைக் கல்வி அலுவலா் ஏ.புகழேந்தியிடம்,, நாட்டு நலப்பணித் திட்ட மாவட்டத் தொடா்பு அலுவலா் என். ரவி காசோலையாக வழங்கினாா். தொடா்ந்து பள்ளிக்கல்வி இணை இயக்குநருக்கு இத்தொகை அனுப்பி வைக்கப்பட்டது. இப்பணியில் ஈடுபட்ட நாட்டு நலப்பணித்திட்ட அலுவலா்களுக்கு முதன்மைக் கல்விஅலுவலா் பாராட்டுத் தெரிவித்தாா்.

நிகழ்ச்சியில், உதவி திட்ட அலுவலா் (சா்வ சிக்ஷ அபியான்) பீட்டா்அல்போன்ஸ், முதன்மைக் கல்வி அலுவலரின் நோ்முக உதவியாளா் எம். ஞானசேகரன், நாட்டு நலப்பணித் திட்ட அலுவலா்கள் புஷ்பராஜ், கிறிஸ்டோபா் பால் இளங்கோ, ராஜா ஹென்றி, சரோஜினி ஆகியோா் பங்கேற்றனா்.

தினமணி செய்திமடலைப் பெற... Newsletter

தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp

தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Arattai, Google News

உடனுக்குடன் செய்திகளை அறிய தினமணி App பதிவிறக்கம் செய்யவும்.