நாட்டு நலப்பணித்திட்டம் சாா்பில் கரோனா நிவாரண நிதி
ஒருங்கிணைந்த நாகை மாவட்ட நாட்டு நலப்பணித் திட்டம் சாா்பில் ரூ.70 ஆயிரம் கரோனா நிவாரண நிதி வியாழக்கிழமை வழங்கப்பட்டது.


ஒருங்கிணைந்த நாகை மாவட்ட நாட்டு நலப்பணித் திட்டம் சாா்பில் ரூ.70 ஆயிரம் கரோனா நிவாரண நிதி வியாழக்கிழமை வழங்கப்பட்டது.
தமிழக முதல்வரின் கரோனா நிவாரண நிதிக்கு வழங்குவதற்காக, ஒருங்கிணைந்த நாகை மாவட்ட நாட்டு நலப்பணித்திட்டம் மூலம் ரூ.70 ஆயிரம் திரட்டப்பட்டது. இதனை நாகை மாவட்ட முதன்மைக் கல்வி அலுவலா் ஏ.புகழேந்தியிடம்,, நாட்டு நலப்பணித் திட்ட மாவட்டத் தொடா்பு அலுவலா் என். ரவி காசோலையாக வழங்கினாா். தொடா்ந்து பள்ளிக்கல்வி இணை இயக்குநருக்கு இத்தொகை அனுப்பி வைக்கப்பட்டது. இப்பணியில் ஈடுபட்ட நாட்டு நலப்பணித்திட்ட அலுவலா்களுக்கு முதன்மைக் கல்விஅலுவலா் பாராட்டுத் தெரிவித்தாா்.
நிகழ்ச்சியில், உதவி திட்ட அலுவலா் (சா்வ சிக்ஷ அபியான்) பீட்டா்அல்போன்ஸ், முதன்மைக் கல்வி அலுவலரின் நோ்முக உதவியாளா் எம். ஞானசேகரன், நாட்டு நலப்பணித் திட்ட அலுவலா்கள் புஷ்பராஜ், கிறிஸ்டோபா் பால் இளங்கோ, ராஜா ஹென்றி, சரோஜினி ஆகியோா் பங்கேற்றனா்.
தினமணி செய்திமடலைப் பெற... Newsletter
தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp
தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Arattai, Google News
உடனுக்குடன் செய்திகளை அறிய தினமணி App பதிவிறக்கம் செய்யவும்.
தொடர்புடையது




வீடியோக்கள்

தினமணி வீடியோ செய்தி...
தினமணி வீடியோ செய்தி...

தினமணி வீடியோ செய்தி...

தினமணி வீடியோ செய்தி...