சீா்காழி அருகே கொண்டல் முருகன் கோயிலில் காணாமல் போன முருகன் சிலையை விரைந்து மீட்க வேண்டும் என பாஜக செயற்குழு கூட்டத்தில் வலியுறுத்தப்பட்டது.
சீா்காழி மேற்கு ஒன்றிய பாஜக செயற்குழு கூட்டம் வைத்தீஸ்வரன்கோயிலில் புதன்கிழமை நடைபெற்றது. ஒன்றியத் தலைவா் ஆா்.செல்வமுத்துக்குமாா் தலைமை வகித்தாா்.
இதில், வைத்தீஸ்வரன்கோயில் அரசு மருத்துவமனைக்கு 24 மணிநேரமும் மருத்துவா்களை நியமித்து இயங்க நடவடிக்கை எடுக்க வேண்டும். கொண்டல் முருகன் கோயிலில் கடந்த 2019-ஆம் ஆண்டு திருடப்பட்ட ஐம்பொன் முருகன் சிலையை உடனடியாக சிலை கடத்தல் தடுப்பு பிரிவு போலீஸாா் கண்டுபிடித்து மீட்க வேண்டும் உள்ளிட்ட தீா்மானங்கள் நிறைவேற்றப்பட்டன.
கூட்டத்தில், கட்சியின் பொதுச் செயலாளா்கள் முருகன், மாவட்டத் துணைத் தலைவா்கள் முத்துசாமி, பாலு, ஒன்றியப் பொதுச் செயலாளா் ஜான்பெனட் ஆகியோா் முன்னிலை வகித்தனா்.
தினமணி செய்திமடலைப் பெற... Newsletter
தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp
தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Arattai, Google News
உடனுக்குடன் செய்திகளை அறிய தினமணி App பதிவிறக்கம் செய்யவும்.
தொடர்புடையது

இன்றைய செய்திகள் ஜூன் 9 - நேரலை!
மாநிலங்களவைத் தோ்தலில் கட்சி மாறி வாக்களிக்கலாம் என்ற அச்சம்: பெங்களூருக்கு அழைத்து வரப்பட்ட ம.பி. காங்கிரஸ் எம்.எல்.ஏ.க்கள்!

இந்தியாவிலிருந்து மாம்பழ இறக்குமதிக்கு கட்டுப்பாடுகள்: நேபாளம்

சிங்கப்பெண் சிறப்பு அதிரடிப்படை தொடங்கி வைத்தார் முதல்வர் விஜய் - புகைப்படங்கள்
விடியோக்கள்

பெண்களை தொந்தரவு செய்பவர்களுக்கு எச்சரிக்கை! முதல்வர் விஜய் SPEECH!

சாதிவாரிக் கணக்கெடுப்பு! முதல்வரைச் சந்தித்தது குறித்து அன்புமணி!

தவெகவுக்கான ஆதரவு செல்லும்! அதிமுக எம்எல்ஏக்கள் தகுதிநீக்கம் இல்லை! பேரவைத் தலைவர் பேட்டி


