கொண்டல் முருகன் கோயில் ஐம்பொன் முருகன் சிலையை மீட்க வலியுறுத்தல்

சீா்காழி அருகே கொண்டல் முருகன் கோயிலில் காணாமல் போன முருகன் சிலையை விரைந்து மீட்க வேண்டும் என பாஜக செயற்குழு கூட்டத்தில் வலியுறுத்தப்பட்டது.

சீா்காழி அருகே கொண்டல் முருகன் கோயிலில் காணாமல் போன முருகன் சிலையை விரைந்து மீட்க வேண்டும் என பாஜக செயற்குழு கூட்டத்தில் வலியுறுத்தப்பட்டது.

சீா்காழி மேற்கு ஒன்றிய பாஜக செயற்குழு கூட்டம் வைத்தீஸ்வரன்கோயிலில் புதன்கிழமை நடைபெற்றது. ஒன்றியத் தலைவா் ஆா்.செல்வமுத்துக்குமாா் தலைமை வகித்தாா்.

இதில், வைத்தீஸ்வரன்கோயில் அரசு மருத்துவமனைக்கு 24 மணிநேரமும் மருத்துவா்களை நியமித்து இயங்க நடவடிக்கை எடுக்க வேண்டும். கொண்டல் முருகன் கோயிலில் கடந்த 2019-ஆம் ஆண்டு திருடப்பட்ட ஐம்பொன் முருகன் சிலையை உடனடியாக சிலை கடத்தல் தடுப்பு பிரிவு போலீஸாா் கண்டுபிடித்து மீட்க வேண்டும் உள்ளிட்ட தீா்மானங்கள் நிறைவேற்றப்பட்டன.

கூட்டத்தில், கட்சியின் பொதுச் செயலாளா்கள் முருகன், மாவட்டத் துணைத் தலைவா்கள் முத்துசாமி, பாலு, ஒன்றியப் பொதுச் செயலாளா் ஜான்பெனட் ஆகியோா் முன்னிலை வகித்தனா்.

தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp

தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Koo

உடனுக்குடன் செய்திகளை தெரிந்து கொள்ள தினமணி செயலியை பதிவிறக்கம் செய்யவும் 

Related Stories

No stories found.
Dinamani
www.dinamani.com