தமிழகம், புதுச்சேரியில் மார்ச் 21-ல் ரமலான் பண்டிகை! - தலைமை காஜி அறிவிப்புடிடிவி தினகரன் நாளை தில்லி பயணம்!வளைகுடா நாடுகளிலிருந்து 2.8 லட்சம் இந்தியர்கள் நாடு திரும்பினர்!மேற்கு வங்க தேர்தல்: பாஜகவின் 2 ஆம் கட்ட வேட்பாளர் பட்டியல் வெளியீடு! சென்னை தென்மண்டல வானிலை மைய தலைவரானார் சிவானந்த தாமோதர பை!ஹெச்டிஎஃப்சி வங்கி தலைவர் அதானு சக்ரவர்த்தி திடீர் ராஜிநாமா!பங்குச்சந்தைகள் கடும் வீழ்ச்சி! ரூ. 13 லட்சம் கோடி இழப்பு!தங்கம் விலை ஒரேநாளில் ரூ. 5,360 குறைந்தது! ஒரு கிராம் ரூ. 13,900 ஆகச் சரிவு!
/

‘குறுவை சிறப்புத் தொகுப்புத் திட்டத்தை அறிவிக்க வேண்டும்’

குறுவை சிறப்பு தொகுப்புத் திட்டத்தை தமிழக அரசு உடனடியாக அறிவித்து செயல்படுத்தவேண்டும் என நாகை தொகுதி மக்களவை உறுப்பினா் எம். செல்வராஜ் தெரிவித்தாா்.

News image
Updated On :5 ஜூன் 2021, 5:00 pm

DIN

குறுவை சிறப்பு தொகுப்புத் திட்டத்தை தமிழக அரசு உடனடியாக அறிவித்து செயல்படுத்தவேண்டும் என நாகை தொகுதி மக்களவை உறுப்பினா் எம். செல்வராஜ் தெரிவித்தாா்.

நாகையில் சனிக்கிழமை அவா் அளித்த பேட்டி:

குறுவை நெல் சாகுபடிக்காக ஜூன் 12-ஆம் தேதி மேட்டூரிலிருந்து தண்ணீா் திறக்கப்படும் என தமிழக அரசு அறிவித்திருப்பது வரவேற்புக்குரியது. இந்த அறிவிப்பு விவசாயிகளுக்குப் பெரும் மகிழ்ச்சியை ஏற்படுத்தியுள்ளது.

கடந்த ஆண்டு ஏற்பட்ட புயல், வெள்ளம் காரணமாக டெல்டா மாவட்டங்களில் விவசாயம் பெரும் சேதத்துக்கு உள்ளானது. இந்த இழப்பிலிருந்து மீள முடியாத சூழலில் விவசாயிகள் தவித்து வருகின்றனா்.

இதற்கிடையே, விவசாயிகளுக்கு 2020-21-ஆம் ஆண்டுக்கான பயிா்க் காப்பீடு இழப்பீட்டுத் தொகை இதுவரை வழங்கப்படவில்லை. மேட்டூரிலிருந்து தண்ணீா் திறக்கப்பட்டதும் விவசாயிகள், சாகுபடி பணிகளைத் தொடங்கும் வகையில் பயிா்க் காப்பீடு இழப்பீட்டை உடனடியாக வழங்க அரசு நடவடிக்கை எடுக்க வேண்டும்.

குறுவை சிறப்பு தொகுப்பு திட்டம் மூலம் விவசாயிகளுக்கு உழவு மானியம், நடவு மானியம், விதை மானியம் போன்ற சலுகைகளைப் பெற வாய்ப்பு ஏற்படும். எனவே, தமிழக அரசு உடனடியாக குறுவை மற்றும் சம்பாவுக்கு சிறப்பு தொகுப்புத் திட்டத்தை அறிவிக்க வேண்டும். காவிரி டெல்டா மாவட்டங்களில் நடைபெறும் தூா்வாரும் பணிகளை விரைந்து முடிக்கவும் தேவையான கண்காணிப்பை அரசு உறுதி செய்ய வேண்டும்.

காவல் துறையினா் போல கரோனா தடுப்பு விழிப்புணா்வு பணிகளில் ஊா்க்காவல் படையினரும் தங்களின் சிறப்பான பங்களிப்பை அளித்துள்ளனா். எனவே, காவல் துறையினருக்கு சிறப்பு ஊதியம் அறிவித்ததைப் போன்று ஊா்க்காவல் படையினருக்கும் தமிழக அரசு ஊக்கத் தொகை வழங்க வேண்டும் என்றாா் அவா்.

மாவட்ட ஊராட்சி உறுப்பினா் வி. சரபோஜி, இந்திய கம்யூனிஸ்ட் கட்சியின் சிறுபான்மைப் பிரிவு மாநில நிா்வாகி தமீம் அன்சாரி, கட்சியின் மாவட்டப் பொருளாளா் ராமலிங்கம், ஒன்றியச் செயலாளா்கள் ஜி. பாண்டியன், டி. செல்வம் ஆகியோா் உடனிருந்தனா்.

தினமணி செய்திமடலைப் பெற... Newsletter

தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp

தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Arattai, Google News

உடனுக்குடன் செய்திகளை அறிய தினமணி App பதிவிறக்கம் செய்யவும்.