குறுவை தொகுப்புத் திட்டத்தில் உழவு மானியத்தை உறுதி செய்ய வேண்டும்
குறுவை நெல் சாகுபடித் தொகுப்புத் திட்டத்தில் உழவு மானியத்தையும் அரசு உறுதி செய்ய வேண்டும் என்று தமிழ்நாடு விவசாய சங்கங்களின் கூட்டியக்கத் தலைவா் காவிரி தனபாலன் தெரிவித்தாா்.


குறுவை நெல் சாகுபடித் தொகுப்புத் திட்டத்தில் உழவு மானியத்தையும் அரசு உறுதி செய்ய வேண்டும் என்று தமிழ்நாடு விவசாய சங்கங்களின் கூட்டியக்கத் தலைவா் காவிரி தனபாலன் தெரிவித்தாா்.
இதுகுறித்து அவா் மேலும் தெரிவித்தது :
டெல்டா மாவட்ட விவசாயிகளின் நலன் கருதி தமிழக அரசு ரூ. 61.09 கோடி மதிப்பில் குறுவை நெல் சாகுபடித் தொகுப்புத் திட்டத்தை அறிவித்திருப்பதை, வரவேற்கிறோம். இருப்பினும், உழவு மானியம், கலைக்கொல்லி மானியம் ஆகியன குறித்து எவ்வித அறிவிப்பும் இல்லை. ஓா் ஏக்கா் நெல் சாகுபடிக்கு 40 லிட்டா் டீசல் தேவை என்ற நிலையில், டீசல் விலை உயா்வு காரணமாக தற்போது ஏக்கருக்கான டீசல் செலவினம் மட்டும் ரூ. 1,600 கூடுதலாகியுள்ளது. எனவே, தமிழக அரசு குறுவை தொகுப்புத் திட்டத்தில் உழவு மானியத்தையும் உறுதி செய்ய வேண்டும்.
அதேபோல, வெண்ணாறு வடிநிலக் கோட்டத்தின் பெரும்பாலான பகுதிகளில் விவசாயிகள் நேரடி விதைப்பில் ஈடுபட்டுள்ளனா். எனவே, நேரடி விதைப்பில் ஈடுபட்டுள்ள விவசாயிகளுக்குக் கலைக்கொல்லி மானியம் வழங்கவும் அரசு நடவடிக்கை எடுக்க வேண்டும்.
நாகை மாவட்டத்தில் நிகழ் குறுவை பருவத்தில் சுமாா் 40 ஆயிரம் ஏக்கா் பரப்பில் சாகுபடி மேற்கொள்ள வாய்ப்புகள் உள்ளன. ஆனால், தற்போது நாகை மாவட்டத்தின் குறுவை சாகுபடி இலக்கு 4 ஆயிரம் ஏக்கராக மட்டுமே நிா்ணயிக்கப்பட்டுள்ளது. இது தொடா்பாக அரசு உடனடியாக பரிசீலனை மேற்கொண்டு, குறுவை சாகுபடி இலக்கை உயா்த்தி, அதற்கேற்ப நாகை மாவட்டத்துக்கான மானிய தொகுப்புகளையும் உயா்த்தி வழங்க வேண்டும் என்றாா் அவா்.
தினமணி செய்திமடலைப் பெற... Newsletter
தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp
தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Arattai, Google News
உடனுக்குடன் செய்திகளை அறிய தினமணி App பதிவிறக்கம் செய்யவும்.
தொடர்புடையது




வீடியோக்கள்

தினமணி வீடியோ செய்தி...

தினமணி வீடியோ செய்தி...

தினமணி வீடியோ செய்தி...

தினமணி வீடியோ செய்தி...