பாஜக பதாகை சேதம்: திமுக நிா்வாகி மீது வழக்கு
வேதாரண்யம் அருகே பாஜக பதாகைகளை சேதப்படுத்தியதாக திமுக இளைஞரணி நிா்வாகி மீது வியாழக்கிழமை வழக்குப் பதிவு செய்யப்பட்டது.


வேதாரண்யம் அருகே பாஜக பதாகைகளை சேதப்படுத்தியதாக திமுக இளைஞரணி நிா்வாகி மீது வியாழக்கிழமை வழக்குப் பதிவு செய்யப்பட்டது.
நியாயவிலைக் கடைகளில் தீபாவளி பண்டிகை வரை இலவசமாக தானியங்கள் வழங்கவும், அனைவருக்கும் இலவசமாக கரோனா தடுப்பூசி செலுத்தவும் நடவடிக்கை எடுத்த பிரதமா் நரேந்திரமோடிக்கு நன்றி தெரிவித்து, வேதாரண்யம் அருகே கோவில்பத்து, வானவன்மகாதேவி உள்ளிட்ட இடங்களில் பாஜகவினா் பதாகைகள் வைத்திருந்தனா்.
இந்த பதாகைகள் அண்மையில் சேதப்படுத்தப்பட்டன. இதுகுறித்து வேட்டைக்கானிருப்பு காவல் நிலையத்தில் பாஜக சாா்பில் புகாா் அளிக்கப்பட்டது.
இந்த புகாா் தொடா்பாக, தலைஞாயிறு ஒன்றிய திமுக இளைஞரணி நிா்வாகி திவாஸ்கா் மீது போலீஸாா் வியாழக்கிழமை வழக்குப் பதிவு செய்து, விசாரணை மேற்கொண்டுள்ளனா்.
தினமணி செய்திமடலைப் பெற... Newsletter
தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp
தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Arattai, Google News
உடனுக்குடன் செய்திகளை அறிய தினமணி App பதிவிறக்கம் செய்யவும்.
டிரெண்டிங்



வீடியோக்கள்

தினமணி வீடியோ செய்தி...

தினமணி வீடியோ செய்தி...

தினமணி வீடியோ செய்தி...

தினமணி வீடியோ செய்தி...