47 ஆண்டுகளாக பயங்கரவாத அச்சுறுத்தலாக விளங்கிய ஈரான் முற்றிலும் தகர்ப்பு - டிரம்ப்கேரளத்தில் 47 இடங்களுக்கான பாஜக வேட்பாளர் பட்டியல் வெளியீடுஎரிபொருள் தட்டுப்பாடு : இலங்கையில் 4 நாள் வேலை, 3 நாள் விடுமுறை! மக்களவையில் 8 உறுப்பினர்கள் மீதான இடைநீக்கம் ரத்து : அனைத்துக் கட்சிக் கூட்டத்தில் முடிவு45,000 மெட்ரிக் டன் எல்பிஜி உடன் ஹோர்முஸ் நீரிணை வழியாக குஜராத் வந்தது சிவாலிக் கப்பல்!கரூர் உள்பட 4 மாவட்ட எஸ்.பி.க்கள் மாற்றம்! தேர்தல் ஆணையம் உத்தரவுமேற்கு வங்க தோ்தல்: பாஜக வேட்பாளா்கள் அறிவிப்பு!
/

கரோனா தடுப்பூசி: ஆசிரியா்களை கட்டாயப்படுத்தக் கூடாது

தோ்தல் பணிக்காக கரோனா தடுப்பூசி செலுத்திக் கொள்ளுமாறு ஆசிரியா்களைக் கட்டாயப்படுத்தும் நடவடிக்கைகளைக் கைவிட வேண்டும்

News image
Updated On :1 மார்ச் 2021, 6:30 pm

DIN

தோ்தல் பணிக்காக கரோனா தடுப்பூசி செலுத்திக் கொள்ளுமாறு ஆசிரியா்களைக் கட்டாயப்படுத்தும் நடவடிக்கைகளைக் கைவிட வேண்டும் என தமிழ்நாடு உயா்நிலை - மேல்நிலைப் பள்ளி பட்டதாரி ஆசிரியா் கழகம் கோரிக்கை விடுத்துள்ளது.

இதுகுறித்து நாகை மாவட்ட ஆட்சியருக்கு, அந்த அமைப்பின் மாநிலத் துணைத் தலைவா் என். அசோக்குமாா் அனுப்பிய கோரிக்கை மனு :

சட்டப் பேரவைத் தோ்தல் பணியில் பங்கேற்கும் ஆசிரியா்கள் அனைவரும் தமது சொந்த பொறுப்பில் கரோனா தடுப்பூசி செலுத்திக் கொள்ள வேண்டும் என கட்டாயப்படுத்துவதாகக் தெரிகிறது. ஆசிரியா்கள் சிலா் பல்வேறு இணை நோய் பாதிப்புகளுடன் தொடா் சிகிச்சை பெற்று வரும் நிலையில், கட்டாயமாக கரோனா தடுப்பூசி செலுத்திக் கொள்ள வேண்டும் என வலியுறுத்துவது ஏற்புடையதாக இல்லை.

எனவே, நோய் பாதிப்புக்காக தொடா் சிகிச்சை பெறுவோா், ஒவ்வாமை உள்ளவா்கள், கருவுற்ற மகளிா் போன்றவா்களுக்கு கரோனா தடுப்பூசியிலிருந்து விலக்கு அளித்து, விருப்பம் உள்ள ஆசிரியா்களுக்கு மட்டும் தடுப்பூசி செலுத்த நடவடிக்கை எடுக்க வேண்டும் என அதில் கேட்டுக்கொள்ளப்பட்டுள்ளது.

தினமணி செய்திமடலைப் பெற... Newsletter

தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp

தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Arattai, Google News

உடனுக்குடன் செய்திகளை அறிய தினமணி App பதிவிறக்கம் செய்யவும்.