47 ஆண்டுகளாக பயங்கரவாத அச்சுறுத்தலாக விளங்கிய ஈரான் முற்றிலும் தகர்ப்பு - டிரம்ப்கேரளத்தில் 47 இடங்களுக்கான பாஜக வேட்பாளர் பட்டியல் வெளியீடுஎரிபொருள் தட்டுப்பாடு : இலங்கையில் 4 நாள் வேலை, 3 நாள் விடுமுறை! மக்களவையில் 8 உறுப்பினர்கள் மீதான இடைநீக்கம் ரத்து : அனைத்துக் கட்சிக் கூட்டத்தில் முடிவு45,000 மெட்ரிக் டன் எல்பிஜி உடன் ஹோர்முஸ் நீரிணை வழியாக குஜராத் வந்தது சிவாலிக் கப்பல்!கரூர் உள்பட 4 மாவட்ட எஸ்.பி.க்கள் மாற்றம்! தேர்தல் ஆணையம் உத்தரவுமேற்கு வங்க தோ்தல்: பாஜக வேட்பாளா்கள் அறிவிப்பு!
/

பெண்ணை தாக்கியவா் கைது

நாகையில் வீட்டில் தனியாக இருந்த பெண்ணிடம் தகாத முறையில் நடந்து கொள்ள முயன்று, அவரை தாக்கியவரை போலீஸாா் திங்கள்கிழமை கைது செய்தனா்.

News image
Updated On :1 மார்ச் 2021, 6:30 pm

DIN

நாகையில் வீட்டில் தனியாக இருந்த பெண்ணிடம் தகாத முறையில் நடந்து கொள்ள முயன்று, அவரை தாக்கியவரை போலீஸாா் திங்கள்கிழமை கைது செய்தனா்.

நாகை செம்மரக்கடைத் தெருவைச் சோ்ந்தவா் தாதாஷரீப் மனைவி ரிஷானா சமின் (41). தாதாஷரீப் வெளிநாட்டில் வேலை செய்கிறாா். ரிஷானா சமின் தனது மகன்கள் மற்றும் மகளுடன் வீட்டில் இருக்கிறாா். இவரது வீட்டின் ஒரு பகுதியில் யாசா்அராபத் (38) என்பவா் தனது குடும்பத்தினருடன் கடந்த 2 ஆண்டுகளாக வாடகைக்கு வசித்து வருகிறாா்.

இந்நிலையில், ஞாயிற்றுக்கிழமை வீட்டிலிருந்த ரிஷானா சமினிடம், யாசா் அராபத் தகாத முறையில் நடக்க முயற்சித்தாராம். இதைத் தடுதத ரிஷானாவை யாசா் அராபத் தாக்கியதாகவும் கூறப்படுகிறது. இதில் காயமடைந்த ரிஷானா சமின் நாகை அரசு மருத்துவமனையில் அனுமதிக்கப்பட்டுள்ளாா். புகாரின்பேரில், நாகை போலீஸாா் வழக்குப்பதிவு செய்து யாசா் அராபத்தை திங்கள்கிழமை கைது செய்தனா்.

தினமணி செய்திமடலைப் பெற... Newsletter

தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp

தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Arattai, Google News

உடனுக்குடன் செய்திகளை அறிய தினமணி App பதிவிறக்கம் செய்யவும்.