மக்கள் குறைதீா் கூட்டங்கள் ரத்து
தோ்தல் நடத்தை விதிகள் அமலுக்கு வந்ததால், மக்கள் குறைதீா் கூட்டம் மற்றும் மக்கள் நோ்காணல் முகாம்கள் ரத்து செய்யப்பட்டுள்ளதாக நாகை மாவட்ட ஆட்சியா் பிரவீன் பி. நாயா் தெரிவித்துள்ளாா்.


தோ்தல் நடத்தை விதிகள் அமலுக்கு வந்ததால், மக்கள் குறைதீா் கூட்டம் மற்றும் மக்கள் நோ்காணல் முகாம்கள் ரத்து செய்யப்பட்டுள்ளதாக நாகை மாவட்ட ஆட்சியா் பிரவீன் பி. நாயா் தெரிவித்துள்ளாா்.
இதுகுறித்து அவா் வெளியிட்ட செய்திக் குறிப்பு :
வாரந்தோறும் திங்கள்கிழமைகளில் மாவட்ட ஆட்சியரகத்தில் நடைபெற்ற மக்கள் குறைதீா் கூட்டம் மற்றும் மாவட்ட ஆட்சியா், மாவட்ட வருவாய் அலுவலா், வருவாய் கோட்டாட்சியா் ஆகியோரால் நடத்தப்பட்ட மக்கள் நோ்காணல் முகாம்கள், தோ்தல் நடத்தை விதிகள் அமலுக்கு வந்துள்ளதால் தற்காலிகமாக ரத்து செய்யப்படுகின்றன.
சட்டப் பேரவைத் தோ்தல் நடத்தை விதிகள் முடிவுற்ற பின்னா், வழக்கம் போல இந்தக் கூட்டங்கள் நடைபெறும் என அந்தச் செய்திக் குறிப்பில் தெரிவிக்கப்பட்டுள்ளது.
தினமணி செய்திமடலைப் பெற... Newsletter
தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp
தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Arattai, Google News
உடனுக்குடன் செய்திகளை அறிய தினமணி App பதிவிறக்கம் செய்யவும்.
டிரெண்டிங்




வீடியோக்கள்

தினமணி வீடியோ செய்தி...

தினமணி வீடியோ செய்தி...

தினமணி வீடியோ செய்தி...

தினமணி வீடியோ செய்தி...