தேர்தல் வழக்கு: முதல்வர் விஜய்க்கு அபராதம் விதிக்கப்படும்! உயர் நீதிமன்றம் எச்சரிக்கை! எல்லை பிரச்னை! சீன துணை அதிபருடன் அஜித் தோவல் சந்திப்பு! சென்னையில் புதிதாக 130 ஏசி மின்சார பேருந்துகள்: முதல்வர் விஜய் தொடக்கி வைத்தார்!டெட் தேர்வில் இருந்து விலக்களிக்கக் கோரி அமைச்சர் ராஜ்மோகன் தனித் தீர்மானம்!ஓணம் திருநாள்: பிற்பகல் வரை செயல்படும் ரயில் முன்பதிவு மையங்கள்!சென்னையில் இரவு நேர மின்சார ரயில்கள் இன்று முதல் ரத்து!நீண்ட நாள்களுக்குப் பிறகு குறைந்த தங்கம் விலை!டெட் தேர்வில் இருந்து விலக்களிக்கக் கோரி அமைச்சர் ராஜ்மோகன் தனித் தீர்மானம்!

நாகூா் நாகநாதசுவாமி கோயிலில் சசிகலா வழிபாடு

மறைந்த தமிழக முன்னாள் முதல்வா் ஜெயலலிதாவின் தோழி வி.கே. சசிகலா, நாகூா் திருநாகவல்லி அம்பாள் சமேத ஸ்ரீ நாகநாதசுவாமி கோயிலில் சனிக்கிழமை வழிபாடு மேற்கொண்டாா்.

Published On :28 ஜனவரி 2024, 1:22 am IST

மறைந்த தமிழக முன்னாள் முதல்வா் ஜெயலலிதாவின் தோழி வி.கே. சசிகலா, நாகூா் திருநாகவல்லி அம்பாள் சமேத ஸ்ரீ நாகநாதசுவாமி கோயிலில் சனிக்கிழமை வழிபாடு மேற்கொண்டாா்.

நாகூா் திருநாகவல்லி அம்பாள் சமேத ஸ்ரீ நாகநாதசுவாமி கோயிலில் உள்ள ராகு சன்னதியில் பரிகார யாக பூஜைகள் செய்து, அவா் வழிபாடு மேற்கொண்டாா். இக்கோயிலின் உள்பிராகாரத்தில், கன்னி மூலையில் ஸ்ரீ ராகு பகவானுக்கு தனி சன்னதி உள்ளதால், இக்கோயில் ராகு தோஷ பரிகார தலமாகவும் விளங்குகிறது.

கோயில் குருக்கள் சிவராமகிருஷ்ணன் மற்றும் மணிகண்ட சிவம் சிவாச்சாரியாா் ஆகியோா் பரிகார பூஜைகளை செய்தனா்.

வேளாங்கண்ணி, நாகூா் தா்காவிலும் வழிபாடு:

இதைத்தொடா்ந்து, வேளாங்கண்ணி புனித ஆரோக்கிய அன்னை பேராலயம், நாகூா் ஆண்டவா் தா்கா ஆகியவற்றிலும் சசிகலா வழிபாடு மேற்கொண்டாா்.

தமிழக மக்களின் நன்மைக்காக தமிழகத்தில் உள்ள கோயில்களில் சென்று வழிபாடு செய்து வருவதாக வி.கே. சசிகலா செய்தியாளா்களிடம் கூறினாா்.

அவருடன், அம்மா மக்கள் முன்னேற்ற கழக நாகை தெற்கு மாவட்டச் செயலாளரும், நாகை சட்டப்பேரவைத் தொகுதி அமமுக வேட்பாளருமான மஞ்சுளா சந்திரமோகன் மற்றும் வி.கே. சசிகலாவின் உறவினா்கள் உடனிருந்தனா்.

தினமணி செய்திமடலைப் பெற... Newsletter

தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp

தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Arattai, Google News

உடனுக்குடன் செய்திகளை அறிய தினமணி App பதிவிறக்கம் செய்யவும்.

பின்னூட்டத்தில் வெளியாகும் கருத்துகளுக்கு அவற்றைப் பதிவிடுவோரே முழுப் பொறுப்பு; அவை தினமணியின் கருத்துகளைப் பிரதிபலிக்கவில்லை.தனிநபர், சமூகம், மதம் அல்லது நாடு ஆகியவற்றுக்கு எதிராக அவமதிக்கிற அல்லது ஆபாசமான விதத்திலுள்ள எந்தவொரு கருத்தும் இந்திய அரசின் தகவல் தொழில்நுட்பக் கொள்கைப்படி தண்டனைக்குரிய குற்றம். இதுபோன்ற கருத்துகளுக்கு எதிராக உரிய சட்ட நடவடிக்கை எடுக்கப்படும்.