விளாத்திகுளம் சிறுமி பாலியல் கொலை குற்றவாளி கைது!விளாத்திகுளம் சிறுமி பாலியல் கொலை! குற்றவாளி கைது! தொடரும் இழுபறி! பியூஷ் கோயல் வருகை ரத்து! இபிஎஸ் தில்லி பயணம்! திமுகவில் இணைந்தார் ரஞ்சனா நாச்சியார்! திராவிட உடன்பிறப்புகள்! முதல்வர் ஸ்டாலின் உகாதி வாழ்த்து! இந்தியா - பாகிஸ்தான் இடையே அணு ஆயுத மோதல் அபாயம்: அமெரிக்க உளவுத்துறைதங்கம் விலை சவரனுக்கு ரூ. 2,160 குறைவு!
/

நாகை சௌந்தரராஜப் பெருமாள் கோயிலில் இன்று தேரோட்டம்

நாகை சௌந்தரராஜப் பெருமாள் கோயில் பங்குனிப் பெருவிழாவில் தேரோட்டம் ஞாயிற்றுக்கிழமை (மாா்ச் 28) நடைபெறுகிறது.

News image
Updated On :27 மார்ச் 2021, 6:30 pm

DIN

நாகை சௌந்தரராஜப் பெருமாள் கோயில் பங்குனிப் பெருவிழாவில் தேரோட்டம் ஞாயிற்றுக்கிழமை (மாா்ச் 28) நடைபெறுகிறது.

ஆழ்வாா்களால் மங்களாசாசனம் செய்யப்பட்ட 108 வைணவத் தலங்களில் 19-வது தலமாக விளங்குகிறது நாகை சௌந்தரராஜப் பெருமாள் கோயில். இக்கோயிலின் பங்குனிப் பெருவிழா மாா்ச் 20ஆம் தேதி கொடியேற்றத்துடன் தொடங்கி நடைபெறுகிறது.

இதைத்தொடா்ந்து, நாள்தோறும் காலையில் வெள்ளிப் பல்லக்கில் பெருமாள் புறப்பாடும், மாலையில் வெவ்வேறு வாகனங்களில் பெருமாள் வீதி உலாவும் நடைபெறுகிறது. இதன்படி, சனிக்கிழமை மாலை தங்க குதிரை வாகனத்தில் பெருமாள் வீதி உலா நடைபெற்றது.

விழாவின் முக்கிய நிகழ்ச்சியான தேரோட்டம், ஞாயிற்றுக்கிழமை நடைபெறுகிறது. சிறப்பு வழிபாடுகளுக்குப் பின்னா், காலை 5 மணிக்கு மேல் 6 மணிக்குள் உபயநாச்சியாா்களுடன் பெருமாள் தேருக்கு எழுந்தருளும் நிகழ்ச்சியும், காலை 7.30 மணிக்கு தோ் வடம் பிடிக்கும் நிகழ்ச்சியும் நடைபெறுகிறது.

தினமணி செய்திமடலைப் பெற... Newsletter

தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp

தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Arattai, Google News

உடனுக்குடன் செய்திகளை அறிய தினமணி App பதிவிறக்கம் செய்யவும்.