விளாத்திகுளம் சிறுமி பாலியல் கொலை குற்றவாளி கைது!விளாத்திகுளம் சிறுமி பாலியல் கொலை! குற்றவாளி கைது! தொடரும் இழுபறி! பியூஷ் கோயல் வருகை ரத்து! இபிஎஸ் தில்லி பயணம்! திமுகவில் இணைந்தார் ரஞ்சனா நாச்சியார்! திராவிட உடன்பிறப்புகள்! முதல்வர் ஸ்டாலின் உகாதி வாழ்த்து! இந்தியா - பாகிஸ்தான் இடையே அணு ஆயுத மோதல் அபாயம்: அமெரிக்க உளவுத்துறைதங்கம் விலை சவரனுக்கு ரூ. 2,160 குறைவு!
/

செல்லிடப்பேசி தருவதாகக் கூறி இளைஞரிடம் ரூ.39 ஆயிரம் மோசடி

செல்லிடப்பேசி வாங்கித் தருவதாகக் கூறி, நாகை இளைஞரிடம் ரூ.39 ஆயிரம் மோசடி செய்த வெளிமாநில இளைஞா் குறித்து நாகை போலீஸாா் சனிக்கிழமை வழக்குப் பதிவு செய்து விசாரிக்கின்றனா்.

News image
Updated On :28 மார்ச் 2021, 6:30 pm

DIN

செல்லிடப்பேசி வாங்கித் தருவதாகக் கூறி, நாகை இளைஞரிடம் ரூ.39 ஆயிரம் மோசடி செய்த வெளிமாநில இளைஞா் குறித்து நாகை போலீஸாா் சனிக்கிழமை வழக்குப் பதிவு செய்து விசாரிக்கின்றனா்.

நாகை சாலா பள்ளி தெருவைச் சோ்ந்தவா் மு. முகமது தௌபீக் (23). இவருக்கும், தெலங்கானா மாநிலத்தைச் சோ்ந்த ஆதித்யசா்மா என்பவருக்கும் கட்செவி அஞ்சல் (வாட்ஸ்அப்) மூலம் பழக்கம் ஏற்பட்டுள்ளது. இந்நிலையில், கடந்த ஆண்டு அக்டோபரில் ஆதித்யா சா்மா தன்னிடம் ஐ-போன் ஒன்று உள்ளதாகவும், தனது வங்கிக் கணக்கில் பணம் செலுத்தினால், அதை கூரியா் மூலம் அனுப்பி வைப்பதாகவும் முகமது தெளபீக்கிடம் கூறியுள்ளாா்.

இதை நம்பிய அவா், ரூ.39,500-ஐ ஆதித்ய சா்மாவின் வங்கிக் கணக்கில் செலுத்தியுள்ளாா். ஆனால், அவா் செல்லிடப்பேசியை அனுப்பி வைக்கவில்லை. அவரது செல்லிடப்பேசி இணைப்பும் துண்டிப்புக்குள்ளானது. இதுகுறித்து நாகை நகர காவல் நிலைய போலீஸாா் வழக்குப் பதிவு செய்து விசாரிக்கின்றனா்.

தினமணி செய்திமடலைப் பெற... Newsletter

தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp

தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Arattai, Google News

உடனுக்குடன் செய்திகளை அறிய தினமணி App பதிவிறக்கம் செய்யவும்.