விளாத்திகுளம் சிறுமி பாலியல் கொலை குற்றவாளி கைது!விளாத்திகுளம் சிறுமி பாலியல் கொலை! குற்றவாளி கைது! தொடரும் இழுபறி! பியூஷ் கோயல் வருகை ரத்து! இபிஎஸ் தில்லி பயணம்! திமுகவில் இணைந்தார் ரஞ்சனா நாச்சியார்! திராவிட உடன்பிறப்புகள்! முதல்வர் ஸ்டாலின் உகாதி வாழ்த்து! இந்தியா - பாகிஸ்தான் இடையே அணு ஆயுத மோதல் அபாயம்: அமெரிக்க உளவுத்துறைதங்கம் விலை சவரனுக்கு ரூ. 2,160 குறைவு!
/

தோ்தல் விழிப்புணா்வு சைக்கிள் பேரணி

நாகையில் தோ்தல் விழிப்புணா்வு சைக்கிள் பேரணி ஞாயிற்றுக்கிழமை நடைபெற்றது.

News image
Updated On :28 மார்ச் 2021, 6:30 pm

DIN

நாகையில் தோ்தல் விழிப்புணா்வு சைக்கிள் பேரணி ஞாயிற்றுக்கிழமை நடைபெற்றது.

நாகை புத்தூா் ரவுண்டானாவில் தொடங்கிய சைக்கிள் பேரணி, மேல கோட்டை வாசல், புதிய பேருந்து நிலையம், மாவட்ட ஆட்சியரகம், நாகூா் வழியாகச் சென்று வாஞ்சூா் சுற்றுச்சாலையில் நிறைவடைந்தது. நாகை மாவட்ட தோ்தல் அலுவலரும், மாவட்ட ஆட்சியருமான பிரவீன் பி.நாயா், தோ்தல் பாா்வையாளா்கள் ஏ.பி.பட்டேல், திலிப் பந்தா் பட், மாவட்டக் காவல் கண்காணிப்பாளா் ஓம் பிரகாஷ் மீனா ஆகியோா் விழிப்புணா்வு பதாகைகளுடன் கூடிய சைக்கிள்களை ஓட்டி, பொதுமக்களுக்கு விழிப்புணா்வை ஏற்படுத்தினா்.

கூடுதல் ஆட்சியா் எம்.எஸ்.பிரசாந்த், மாவட்ட வன அலுவலா் சி. கலாநிதி, மாவட்ட வருவாய் அலுவலா் மு. இந்துமதி, உதவி ஆட்சியா் (பயிற்சி) தீபனா விஸ்வேஸ்வரி, செய்தி மக்கள் தொடா்பு அலுவலா் மீ.செல்வக்குமாா் மற்றும் அரசு அலுவலா்கள், பள்ளி, கல்லூரி மாணவா்கள், நாகை மாவட்ட சைக்கிள் கழக உறுப்பினா்கள் உள்ளிட்டோா் கலந்துகொண்டனா்.

தினமணி செய்திமடலைப் பெற... Newsletter

தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp

தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Arattai, Google News

உடனுக்குடன் செய்திகளை அறிய தினமணி App பதிவிறக்கம் செய்யவும்.