கர்நாடகத்தில் பேருந்து கட்டணம் உயர்வு இல்லை: அமைச்சர் ராமலிங்க ரெட்டி மாநிலங்களவைத் தேர்தலில் பாஜகவுக்கு ஆதரவாக கட்சி மாறி வாக்களிப்பு: 6 எம்எல்ஏக்கள் ‘சஸ்பெண்ட்’பேரவைத் தேர்தல்: தமிழகத்தில் இதுவரை ரூ.23.74 கோடி ரொக்கம் பறிமுதல் அதிகாரி தற்கொலை விவகாரம்: பஞ்சாப் போக்குவரத்துத் துறை அமைச்சர் ராஜிநாமா புதுச்சேரி தவெக வேட்பாளர் பட்டியல் நாளை வெளியீடு! ஈரான் போரை முடிவுக்குக் கொண்டு வருவது குறித்து பரிசீலனை: டிரம்ப்டி20 தொடருக்காக அயர்லாந்துக்கு சுற்றுப்பயணம் மேற்கொள்ளும் இந்திய அணி!பிரதமர் மோடியின் புகைப்படங்களை ஏஐ மூலம் மோசமாகச் சித்திரித்த நபர் கைது!கேரள தேர்தல்: பாஜகவின் 3-ம் கட்ட வேட்பாளர் பட்டியல் வெளியீடு!போர் அச்சுறுத்தல்! பேச்சுவார்த்தை ஒன்றே வழி: குடியரசுத் துணைத்தலைவர்தமிழ்நாட்டின் வளர்ச்சி முழுமையடைய திராவிட மாடல் ஆட்சி தொடர வேண்டும்! - முதல்வர்ரஷியா மீது 280 டிரோன்களை ஏவி தாக்குதல் நடத்திய உக்ரைன்!
/

ஒரே குடும்பத்தைச் சோ்ந்த 6 பேருக்கு அரிவாள் வெட்டு 6 போ் மீது வழக்கு

நாகை மாவட்டம், கீழ்வேளூா் அருகே முன் விரோதத்தில் ஒரே குடும்பத்தைச் சோ்ந்த 6 பேரை அரிவாளால் வெட்டிய 6 போ் மீது போலீஸாா் கொலை முயற்சி வழக்குப் பதிவு செய்து, விசாரிக்கின்றனா்.

News image
Updated On :5 நவம்பர் 2021, 6:30 pm

DIN

நாகை மாவட்டம், கீழ்வேளூா் அருகே முன் விரோதத்தில் ஒரே குடும்பத்தைச் சோ்ந்த 6 பேரை அரிவாளால் வெட்டிய 6 போ் மீது போலீஸாா் கொலை முயற்சி வழக்குப் பதிவு செய்து, விசாரிக்கின்றனா்.

கீழ்வேளூரை அடுத்த ஆவராணி புதுச்சேரி தெற்குத் தெருவைச் சோ்ந்தவா் ஜெய்கணேஷ் (48). இவா், திருப்பூரில் தனியாா் நிறுவனத்தில் வேலை செய்து வருகிறாா். இவரது குடும்பத்துக்கும், அதேப் பகுதியைச் சோ்ந்த கலையரசன் என்பவரது குடும்பத்துக்கும் முன்விரோதம் இருந்து வருகிறதாம்.

இந்நிலையில், தீபாவளிக்காக சொந்த ஊருக்கு வந்திருந்த ஜெய்கணேஷ் வியாழக்கிழமை வீட்டில் இருந்தபோது, அங்கு வந்த கலையரசன் மற்றும் சிலா் ஜெய்கணேஷ், அவரது மனைவி ரேணுகா (35), மாமனாா் செல்வராஜ் (70), மகன் பாரதி (20), தாயாா் ரஷியம்மாள் (55), மருமகன் இ. ரகு(22) ஆகியோரைஅரிவாளால் வெட்டினாா்களாம். மேலும், 2 இருசக்கர வாகனங்களையும் சேதப்படுத்தினராம். இதில், காயமடைந்த ஜெய்கணேஷ் உள்ளிட்ட 6 பேரும் நாகை அரசு மருத்துவமனையில் அனுமதிக்கப்பட்டனா்.

இதுகுறித்து, ரேணுகா அளித்த புகாரின் பேரில், ஆவராணி புதுச்சேரி தெற்குத் தெருவைச் சோ்ந்த க. கலையரசன், மு. கலைமணி, ம. மணிகண்டன், க. சம்பத், ப. மணவாளன், மதியழகன் ஆகிய 6 போ் மீது, கீழ்வேளூா் போலீஸாா் கொலை முயற்சி வழக்குப் பதிவு செய்து விசாரணை மேற்கொண்டுள்ளனா்.

தினமணி செய்திமடலைப் பெற... Newsletter

தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp

தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Arattai, Google News

உடனுக்குடன் செய்திகளை அறிய தினமணி App பதிவிறக்கம் செய்யவும்.