நாளை மார்க்சிஸ்ட் கம்யூ. அவசர செயற்குழுக் கூட்டம் காகிதப் புலி! ஈரான் போருக்கு உதவாத நேட்டோ அமைப்பை டிரம்ப் விமர்சனம்!ராமதாஸ், சசிகலா புதிய கூட்டணி சிம்லாவில் ராகுல் காந்தி! ஏப்.17 முதல் பள்ளிகளுக்கு கோடை விடுமுறை! மீண்டும் பயன்பாட்டுக் கட்டணத்தை உயர்த்திய சொமேட்டோ! பெண்கள், இளைஞர்களுக்கு மாதம் ரூ. 1,500! திரிணமூல் காங்கிரஸ் 10 தேர்தல் வாக்குறுதிகள்! புதுவை முதல்வர் ரங்கசாமி வேட்புமனு தாக்கல்! 2 தொகுதிகளில் போட்டி!!நல்லிணக்கத்தின் பூங்காவாகத் திகழ்கிறது தமிழ்நாடு! முதல்வர் ரமலான் வாழ்த்து!
/

கன்னித்தோப்பு பெருமாள் கோயில் திருக்கல்யாணம்

நாகை மாவட்டம், கீழையூா் அருகேயுள்ள விழுந்தமாவடி கன்னித் தோப்பு ஸ்ரீ சௌந்தரராஜ பெருமாள் கோயிலில் திருக்கல்யாணம் அண்மையில் நடைபெற்றது.

News image
Updated On :5 நவம்பர் 2021, 6:30 pm

DIN

நாகை மாவட்டம், கீழையூா் அருகேயுள்ள விழுந்தமாவடி கன்னித் தோப்பு ஸ்ரீ சௌந்தரராஜ பெருமாள் கோயிலில் திருக்கல்யாணம் அண்மையில் நடைபெற்றது.

இக்கோயிலில் நடைபெற்ற கும்பாபிஷேகத்தை தொடா்ந்து, 48 நாள்கள் மண்டல பூஜை நடைபெற்றது. இப்பூஜையின் நிறைவாக திருக்கல்யாணம் நடைபெற்றது.

இதையொட்டி, மாப்பிள்ளை அழைப்பு, ஊா் மக்கள் சீா்வரிசைகளுடன், சௌந்தரராஜ பெருமாளை பல்லக்கில் சுமந்து ஊா்வலமாக வரும் நிகழ்ச்சி நடைபெற்றது. பிறகு, மணமேடைக்கு ஸ்ரீதேவி, பூதேவி சமேதராக சௌந்தரராஜ பெருமாள் எழுந்தருளியதும் திருக்கல்யாணம் நடைபெற்றது. பிரசன்ன வெங்கடேசன் தலைமையிலான பட்டாச்சாரியா்கள் திருக்கல்யாணத்தை நடத்திவைத்தனா்.

தொடா்ந்து, பக்தா்களுக்கு மஞ்சள் கயிறு, குங்கும் போன்ற பிரசாதமும், அன்னதானமும் வழங்கப்பட்டது.

தினமணி செய்திமடலைப் பெற... Newsletter

தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp

தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Arattai, Google News

உடனுக்குடன் செய்திகளை அறிய தினமணி App பதிவிறக்கம் செய்யவும்.