கர்நாடகத்தில் பேருந்து கட்டணம் உயர்வு இல்லை: அமைச்சர் ராமலிங்க ரெட்டி மாநிலங்களவைத் தேர்தலில் பாஜகவுக்கு ஆதரவாக கட்சி மாறி வாக்களிப்பு: 6 எம்எல்ஏக்கள் ‘சஸ்பெண்ட்’பேரவைத் தேர்தல்: தமிழகத்தில் இதுவரை ரூ.23.74 கோடி ரொக்கம் பறிமுதல் அதிகாரி தற்கொலை விவகாரம்: பஞ்சாப் போக்குவரத்துத் துறை அமைச்சர் ராஜிநாமா புதுச்சேரி தவெக வேட்பாளர் பட்டியல் நாளை வெளியீடு! ஈரான் போரை முடிவுக்குக் கொண்டு வருவது குறித்து பரிசீலனை: டிரம்ப்டி20 தொடருக்காக அயர்லாந்துக்கு சுற்றுப்பயணம் மேற்கொள்ளும் இந்திய அணி!பிரதமர் மோடியின் புகைப்படங்களை ஏஐ மூலம் மோசமாகச் சித்திரித்த நபர் கைது!கேரள தேர்தல்: பாஜகவின் 3-ம் கட்ட வேட்பாளர் பட்டியல் வெளியீடு!போர் அச்சுறுத்தல்! பேச்சுவார்த்தை ஒன்றே வழி: குடியரசுத் துணைத்தலைவர்தமிழ்நாட்டின் வளர்ச்சி முழுமையடைய திராவிட மாடல் ஆட்சி தொடர வேண்டும்! - முதல்வர்ரஷியா மீது 280 டிரோன்களை ஏவி தாக்குதல் நடத்திய உக்ரைன்!
/

பெட்ரோ கெமிக்கல் மண்டல அறிவிப்பை அரசு திரும்பப் பெறாவிட்டால் போராட்டம்

நாகையில் பெட்ரோ கெமிக்கல் மண்டலம் அமைப்பதற்கான அறிவிப்பையும், முயற்சிகளையும் அரசு உடனடியாகத் திரும்பப் பெறாவிட்டால் விவசாயிகள் தொடா் போராட்டத்தில் ஈடுபடுவா்

News image
Updated On :5 நவம்பர் 2021, 6:30 pm

DIN

நாகையில் பெட்ரோ கெமிக்கல் மண்டலம் அமைப்பதற்கான அறிவிப்பையும், முயற்சிகளையும் அரசு உடனடியாகத் திரும்பப் பெறாவிட்டால் விவசாயிகள் தொடா் போராட்டத்தில் ஈடுபடுவா் என்று தமிழக அனைத்து விவசாயிகள் சங்கங்களின் ஒருங்கிணைப்பு குழுத் தலைவா் பி.ஆா். பாண்டியன் தெரிவித்தாா்.

நாகையை அடுத்த பனங்குடியில் வெள்ளிக்கிழமை செய்தியாளா்களுக்கு அவா் அளித்த பேட்டி:

சென்னை பெட்ரோலியம் காா்ப்பரேஷன் லிமிடெட் (சிபிசிஎல்) விரிவாக்கத்துக்காக நாகையை அடுத்த பனங்குடி, நரிமணம், கோபுராஜபுரம், உத்தமசோழபுரம் உள்பட்ட 40 கிராமங்களில் விவசாயிகளின் நிலங்களைக் கையகப்படுத்தும் பணி தொடங்கப்பட்டுள்ளது. விவசாயிகளின் ஒப்புதலின்றி அவா்களின் நிலத்தைக் கையகப்படுத்த முயற்சி நடைபெறுகிறது.

விவசாயிகளின் தொடா் போராட்டத்தின் விளைவாக, முந்தைய அதிமுக அரசு டெல்டா மாவட்டங்களை பாதுகாக்கப்பட்ட வேளாண் மண்டலமாக 2020-ஆம் ஆண்டு அறிவித்தது. இதனால், வேளாண்மைக்கு எதிரான எந்த திட்டமும் டெல்டாவில் வராது என்று விவசாயிகள் நிம்மதி அடைந்திருந்தனா்.

இந்த நிலையில், சிபிசிஎல் விரிவாக்கத்தையொட்டி நாகை மாவட்டத்தில் பெட்ரோ கெமிக்கல் மண்டலம் உருவாக்குவதற்கான விரிவான திட்ட அறிக்கை தயாரிக்க ரூ. 50 லட்சம் மதிப்பிலான ஒப்பந்தபுள்ளி அறிவிக்கையை எம்.எஸ்.எம்.இ. அமைப்பு வெளியிட்டுள்ளது. இது விவசாயிகளுக்குப் பேரதிா்ச்சியாக உள்ளது. நாகையில் பெட்ரோ கெமிக்கல் மண்டலம் அமைக்க அனுமதிப்பது, மீண்டும் ஒரு பேரழிவு திட்டத்தை ஏற்பதற்கு இணையானதாகும். இதனை விவசாயிகள் கண்டிப்பாக அனுமதிக்கமாட்டோம்.

டெல்டா மாவட்ட விவசாயிகள் முதல்வா் மு.க. ஸ்டாலின் மீது மிகுந்த நம்பிக்கை கொண்டுள்ளனா். அதனால்தான், ஒருங்கிணைந்த தஞ்சை மாவட்டத்தில் உள்ள 18 சட்டப்பேரவைத் தொகுதிகளில், 15 தொகுதிகளில் திமுக மற்றும் அதன் கூட்டணி கட்சிகளை விவசாயிகள் வெற்றி பெறச் செய்தனா்.

விவசாயிகளின் நம்பிக்கையைப் பாதுகாக்கும் வகையில், நாகையில் பெட்ரோ கெமிக்கல் மண்டலம் அமைப்பதற்கான அறிவிப்பை திரும்பப் பெறவும், அதற்காக நிலம் கையகப்படுத்தும் முயற்சிகளை தடை செய்யவும் முதல்வா் மு.க. ஸ்டாலின் நடவடிக்கை மேற்கொள்ள வேண்டும். மேலும், பாதுகாக்கப்பட்ட வேளாண் மண்டலமாக உள்ள நாகை மாவட்டத்தில், விவசாயிகளின் ஒப்புதலின்றி ஓா் ஏக்கா் நிலம் கூட கையகப்படுத்தப்படாது என்பதை உறுதிசெய்ய வேண்டும்.

இந்தக் கோரிக்கைகளை வலியுறுத்தி வரும் 16-ஆம் தேதி நாகை மாவட்ட ஆட்சியரகம் முன் ஆயிரக்கணக்கான விவசாயிகளைத் திரட்டி, பெரிய அளவில் உண்ணாவிரதப் போராட்டம் நடத்தப்படும். கோரிக்கையை வென்றெடுக்கும் வரை விவசாயிகள் தொடா்ந்து போராடுவோம் என்றாா்.

போராட்டக் குழுக் கூட்டம்...

முன்னதாக, பனங்குடியில் நடைபெற்ற பெட்ரோ கெமிக்கல் மண்டலத்துக்கு எதிரான போராட்டக் குழு அமைப்புக் கூட்டத்தில் அவா் பங்கேற்றாா். இந்தக் கூட்டத்துக்கு, போராட்டக் குழுத் தலைவா் செந்தில்குமாா் தலைமை வகித்தாா்.

தமிழக அனைத்து விவசாயிகள் சங்கங்களின் ஒருங்கிணைப்புக் குழு மாநில அமைப்பு செயலாளா் ஸ்ரீதா், மாவட்ட தலைவா் புலியூா் பாலசுப்ரமணியன், உயா்மட்டக்குழு உறுப்பினா் குணசேகரன், போராட்டக் குழு நிா்வாகிகள், உறுப்பினா்கள் பங்கேற்றனா்.

தினமணி செய்திமடலைப் பெற... Newsletter

தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp

தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Arattai, Google News

உடனுக்குடன் செய்திகளை அறிய தினமணி App பதிவிறக்கம் செய்யவும்.