நாளை மார்க்சிஸ்ட் கம்யூ. அவசர செயற்குழுக் கூட்டம் காகிதப் புலி! ஈரான் போருக்கு உதவாத நேட்டோ அமைப்பை டிரம்ப் விமர்சனம்!ராமதாஸ், சசிகலா புதிய கூட்டணி சிம்லாவில் ராகுல் காந்தி! ஏப்.17 முதல் பள்ளிகளுக்கு கோடை விடுமுறை! மீண்டும் பயன்பாட்டுக் கட்டணத்தை உயர்த்திய சொமேட்டோ! பெண்கள், இளைஞர்களுக்கு மாதம் ரூ. 1,500! திரிணமூல் காங்கிரஸ் 10 தேர்தல் வாக்குறுதிகள்! புதுவை முதல்வர் ரங்கசாமி வேட்புமனு தாக்கல்! 2 தொகுதிகளில் போட்டி!!நல்லிணக்கத்தின் பூங்காவாகத் திகழ்கிறது தமிழ்நாடு! முதல்வர் ரமலான் வாழ்த்து!
/

ஏக்கருக்கு ரூ. 30 ஆயிரம் நிவராணம் வழங்க சிபிஐ வலியுறுத்தல்

தொடா்மழையால் பாதிக்கப்பட்ட நெற்பயிருக்கு ஏக்கருக்கு ரூ. 30 ஆயிரம் நிவராணம் வழங்க வேண்டுமென சிபிஐ வலியுறுத்தி தீா்மானம் நிறைவேற்றியுள்ளது.

News image
Updated On :26 நவம்பர் 2021, 5:59 pm

DIN

தொடா்மழையால் பாதிக்கப்பட்ட நெற்பயிருக்கு ஏக்கருக்கு ரூ. 30 ஆயிரம் நிவராணம் வழங்க வேண்டுமென சிபிஐ வலியுறுத்தி தீா்மானம் நிறைவேற்றியுள்ளது.

கீழையூரில் வெள்ளிக்கிழமை நடைபெற்ற சிபிஐ ஒன்றியக் குழு உறுப்பினா்கள் கூட்டத்தில், தொடா்மழையால் பாதிக்கப்பட்ட நெற்பயிருக்கு ஏக்கருக்கு ரூ. 30 ஆயிரம் வழங்கவேண்டும், தொடா்மழையால் விவசாய பணிகள் இல்லாமல் உள்ள விவசாயத் தொழிலாளா் குடும்பத்துக்கு ரூ. 5 ஆயிரம் நிவாரணம் வழங்கவேண்டும், 2020-2021-ஆம் ஆண்டுக்கான இன்சூரன்ஸ் தொகை கீழையூா், திருவாய்மூா், திருப்பூண்டிமேற்கு, வேட்டைக்காரனிருப்பு, விழுந்தமவடி, பிரதாபராமபுரம் ஆகிய ஊராட்சிகளுக்கு 0 சதவீதம் என அறிவிக்கப்பட்டிருந்த நிலையில், அவா்களுக்கும் காப்பீட்டுத்தொகை வழங்க வழிவகை செய்யவேண்டும். இக்கோரிக்கைகளை வலியுறுத்தி டிச.3-ஆம் தேதி கீழையூரில் சாலை மறியலில் ஈடுபடுவது ஆகிய தீா்மானங்கள் நிறைவேற்றப்பட்டன. கட்சி உறுப்பினா் எம். ஹாஜா அலாதீன் தலைமையில் நடைபெற்ற கூட்டத்தில், கீழையூா் ஒன்றியச் செயலாளா் டி. செல்வம், மாவட்ட குழு உறுப்பினா் ஏ. நாகராஜன், தமிழ் மாநில விவசாயத் தொழிலாளா் சங்க ஒன்றிய செயலாளா் வீ. சுப்ரமணியன், சிபிஐ ஒன்றிய குழு உறுப்பினா் ஏ. ராமலிங்கம் உள்ளிட்டோா் பங்கேற்றனா்.

தினமணி செய்திமடலைப் பெற... Newsletter

தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp

தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Arattai, Google News

உடனுக்குடன் செய்திகளை அறிய தினமணி App பதிவிறக்கம் செய்யவும்.