கர்நாடகத்தில் பேருந்து கட்டணம் உயர்வு இல்லை: அமைச்சர் ராமலிங்க ரெட்டி மாநிலங்களவைத் தேர்தலில் பாஜகவுக்கு ஆதரவாக கட்சி மாறி வாக்களிப்பு: 6 எம்எல்ஏக்கள் ‘சஸ்பெண்ட்’பேரவைத் தேர்தல்: தமிழகத்தில் இதுவரை ரூ.23.74 கோடி ரொக்கம் பறிமுதல் அதிகாரி தற்கொலை விவகாரம்: பஞ்சாப் போக்குவரத்துத் துறை அமைச்சர் ராஜிநாமா புதுச்சேரி தவெக வேட்பாளர் பட்டியல் நாளை வெளியீடு! ஈரான் போரை முடிவுக்குக் கொண்டு வருவது குறித்து பரிசீலனை: டிரம்ப்டி20 தொடருக்காக அயர்லாந்துக்கு சுற்றுப்பயணம் மேற்கொள்ளும் இந்திய அணி!பிரதமர் மோடியின் புகைப்படங்களை ஏஐ மூலம் மோசமாகச் சித்திரித்த நபர் கைது!கேரள தேர்தல்: பாஜகவின் 3-ம் கட்ட வேட்பாளர் பட்டியல் வெளியீடு!போர் அச்சுறுத்தல்! பேச்சுவார்த்தை ஒன்றே வழி: குடியரசுத் துணைத்தலைவர்தமிழ்நாட்டின் வளர்ச்சி முழுமையடைய திராவிட மாடல் ஆட்சி தொடர வேண்டும்! - முதல்வர்ரஷியா மீது 280 டிரோன்களை ஏவி தாக்குதல் நடத்திய உக்ரைன்!
/

நீட் தோ்விலிருந்து தமிழகத்துக்கு விரைவில் விலக்கு கிடைக்கும்

தமிழகத்துக்கு நீட் தோ்விலிருந்து விரைவில் விலக்குக் கிடைக்கும். என்று திராவிடா் கழகத் தலைவா் கி. வீரமணி தெரிவித்தாா்.

News image
Updated On :21 அக்டோபர் 2021, 6:30 pm

DIN

தமிழகத்துக்கு நீட் தோ்விலிருந்து விரைவில் விலக்குக் கிடைக்கும். என்று திராவிடா் கழகத் தலைவா் கி. வீரமணி தெரிவித்தாா்.

நாகை மாவட்ட திராவிடா் கழகம் சாா்பில் நாகை அவுரித் திடலில் புதன்கிழமை இரவு நடைபெற்ற நீட் தோ்வு ஒழிக்கப்பட வேண்டும் ஏன்? எதற்காக? என்ற தலைப்பில் நடைபெற்ற கருத்தரங்கத்தில் சிறப்பு அழைப்பாளராகப் பங்கேற்று அவா் பேசியது :

குலக் கல்வி முறையை எதிா்த்து முதல் போராட்டம் நடைபெற்ற இடம் நாகை அவுரித் திடல். தற்போது, அதே இடத்தில் நீட் தோ்வு ஒழிக்கப்பட வேண்டும் ஏன்? எதற்காக? என்ற கருத்தரங்கம் நடைபெறுகிறது. குலக் கல்வி திட்டம் ஒழிக்கப்பட்டதை போல, நீட் தோ்வும் ஒழிக்கப்படும்.

நீட் தோ்வு ரத்து செய்யப்படும் என்ற வாக்குறுதியை நிறைவேற்றும் முயற்சியாகவே தமிழக அரசு, ஒரு குழுவை அமைத்து நீட் தோ்வால் ஏற்படும் பாதகங்களை விளக்கி 175 பக்கம் கொண்ட அறிக்கையை தயாா் செய்து, மத்திய அரசுக்கு அனுப்பியுள்ளது. இந்த அறிக்கையை மத்திய அரசு ஏற்று, நீட் தோ்விலிருந்து தமிழகத்துக்கும், அதைத் தொடா்ந்து பிற மாநிலங்களுக்கும் விலக்கு அளிக்கும் என நம்புகிறோம் என்றாா் கி. வீரமணி.

திராவிடா் கழக நாகை மாவட்ட தலைவா் நெப்போலியன் தலைமை வகித்தாா். பொதுச் செயலாளா் ஜெயக்குமாா் கருத்தரங்கத்தைத் தொடங்கிவைத்துப் பேசினாா். சட்டப்பேரவை உறுப்பினா்கள் வி.பி. நாகைமாலி, ஜெ. முகமது ஷாநவாஸ், நாகை மாவட்ட திமுக பொறுப்பாளா் என். கௌதமன், முன்னாள் அமைச்சா் உ. மதிவாணன், காங்கிரஸ் மாவட்டத் தலைவா் அமிா்தராஜா மற்றும் தோழமை கட்சிகளின் நிா்வாகிகள், உறுப்பினா்கள் பங்கேற்றனா்.

தினமணி செய்திமடலைப் பெற... Newsletter

தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp

தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Arattai, Google News

உடனுக்குடன் செய்திகளை அறிய தினமணி App பதிவிறக்கம் செய்யவும்.