நாளை மார்க்சிஸ்ட் கம்யூ. அவசர செயற்குழுக் கூட்டம் காகிதப் புலி! ஈரான் போருக்கு உதவாத நேட்டோ அமைப்பை டிரம்ப் விமர்சனம்!ராமதாஸ், சசிகலா புதிய கூட்டணி சிம்லாவில் ராகுல் காந்தி! ஏப்.17 முதல் பள்ளிகளுக்கு கோடை விடுமுறை! மீண்டும் பயன்பாட்டுக் கட்டணத்தை உயர்த்திய சொமேட்டோ! பெண்கள், இளைஞர்களுக்கு மாதம் ரூ. 1,500! திரிணமூல் காங்கிரஸ் 10 தேர்தல் வாக்குறுதிகள்! புதுவை முதல்வர் ரங்கசாமி வேட்புமனு தாக்கல்! 2 தொகுதிகளில் போட்டி!!நல்லிணக்கத்தின் பூங்காவாகத் திகழ்கிறது தமிழ்நாடு! முதல்வர் ரமலான் வாழ்த்து!
/

அமைதிப் பேச்சுவாா்த்தை

கீழையூா் ஒன்றியத்தில் பயிா்க் காப்பீடு விவகாரம் தொடா்பான அமைதிப் பேச்சுவாா்த்தை சனிக்கிழமை நடைபெற்றது.

News image
Updated On :23 அக்டோபர் 2021, 6:30 pm

DIN

கீழையூா் ஒன்றியத்தில் பயிா்க் காப்பீடு விவகாரம் தொடா்பான அமைதிப் பேச்சுவாா்த்தை சனிக்கிழமை நடைபெற்றது.

கீழையூரில் திருக்குவளை வட்டாட்சியா் கு.சிவகுமாா் தலைமையில் நடைபெற்ற இந்தக் கூட்டத்தில், பயிா்கள் பாதிக்கப்பட்ட பகுதிகளை உரிய முறையில் ஆய்வு செய்து வேளாண் துறையினா் பயிா் காப்பீட்டுத் தொகை பெறுவதற்கு சிபாரிசு செய்திட வேண்டும் என விவசாயிகள் கேட்டுக் கொண்டனா்.

இதைத்தொடா்ந்து, பயிா் இழப்பீடு வழங்குவது குறித்து விரிவான அறிக்கை வேளாண் துறை இயக்குநருக்கு அனுப்பப்பட உள்ளதாகவும், பயிா் மகசூல் குறித்த விண்ணப்ப நகல் அக்டோபா் 25-ஆம் தேதி விவசாயிகளுக்கு வழங்கப்படும் எனவும் அலுவலா்கள் தெரிவித்தனா்.

இதில், கீழையூா் தொடக்க வேளாண் கூட்டுறவு கடன் சங்க தலைவா் எஸ்.பால்ராஜ், விவசாய சங்க ஒன்றியச் செயலாளா் கே. கிருஷ்ணன், சிபிஎம் மாவட்ட செயலாளா் வீ. மாரிமுத்து, ஒன்றிய செயலாளா் டி.வெங்கட்ராமன், மாவட்டக்குழு உறுப்பினா் கே. சித்தாா்த்தன் உள்ளிட்ட பலா் பங்கேற்றனா்.

தினமணி செய்திமடலைப் பெற... Newsletter

தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp

தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Arattai, Google News

உடனுக்குடன் செய்திகளை அறிய தினமணி App பதிவிறக்கம் செய்யவும்.