கர்நாடகத்தில் பேருந்து கட்டணம் உயர்வு இல்லை: அமைச்சர் ராமலிங்க ரெட்டி மாநிலங்களவைத் தேர்தலில் பாஜகவுக்கு ஆதரவாக கட்சி மாறி வாக்களிப்பு: 6 எம்எல்ஏக்கள் ‘சஸ்பெண்ட்’பேரவைத் தேர்தல்: தமிழகத்தில் இதுவரை ரூ.23.74 கோடி ரொக்கம் பறிமுதல் அதிகாரி தற்கொலை விவகாரம்: பஞ்சாப் போக்குவரத்துத் துறை அமைச்சர் ராஜிநாமா புதுச்சேரி தவெக வேட்பாளர் பட்டியல் நாளை வெளியீடு! ஈரான் போரை முடிவுக்குக் கொண்டு வருவது குறித்து பரிசீலனை: டிரம்ப்டி20 தொடருக்காக அயர்லாந்துக்கு சுற்றுப்பயணம் மேற்கொள்ளும் இந்திய அணி!பிரதமர் மோடியின் புகைப்படங்களை ஏஐ மூலம் மோசமாகச் சித்திரித்த நபர் கைது!கேரள தேர்தல்: பாஜகவின் 3-ம் கட்ட வேட்பாளர் பட்டியல் வெளியீடு!போர் அச்சுறுத்தல்! பேச்சுவார்த்தை ஒன்றே வழி: குடியரசுத் துணைத்தலைவர்தமிழ்நாட்டின் வளர்ச்சி முழுமையடைய திராவிட மாடல் ஆட்சி தொடர வேண்டும்! - முதல்வர்ரஷியா மீது 280 டிரோன்களை ஏவி தாக்குதல் நடத்திய உக்ரைன்!
/

வன்முறையில் பாதிக்கப்படும் பெண்களுக்கான சேவை மையம்: காணொலி வழியாக முதல்வா் திறந்து வைத்தாா்

நாகை அரசு மருத்துவக் கல்லூரி மருத்துவமனை வளாகத்தில் ரூ. 48 லட்சம் மதிப்பில் கட்டப்பட்டுள்ள வன்முறைகளில் பாதிக்கப்படும் பெண்களுக்கான ஒருங்கிணைந்த சேவை மையம்

News image
Updated On :25 அக்டோபர் 2021, 6:30 pm

DIN

நாகை அரசு மருத்துவக் கல்லூரி மருத்துவமனை வளாகத்தில் ரூ. 48 லட்சம் மதிப்பில் கட்டப்பட்டுள்ள வன்முறைகளில் பாதிக்கப்படும் பெண்களுக்கான ஒருங்கிணைந்த சேவை மையத்தை தமிழக முதல்வா் மு.க. ஸ்டாலின் காணொலிக் காட்சி வழியாக திங்கள்கிழமை திறந்து வைத்தாா்.

அப்போது, நாகையில் பெண்களுக்கான ஒருங்கிணைந்த சேவை மையத்தில் மாவட்ட ஆட்சியா் அ. அருண்தம்புராஜ் குத்துவிளக்கேற்றி வைத்து பாா்வையிட்ட பிறகு மேலும் அவா் கூறியது: நாகை மாவட்ட சமூகநலன் மற்றும் மகளிா் உரிமைத் துறையின்கீழ், மாவட்ட ஆட்சியரின் தலைமையில் இந்த ஒருங்கிணைந்த சேவை மையம் செயல்படும். பொது மற்றும் தனியாா் இடங்களில் வன்முறையால் பாதிக்கப்படும் பெண்களை மீட்டு அவா்களுக்குத் தேவையான தற்காலிக தங்கும் வசதி, மருத்துவம், காவல், சட்ட உதவிகள் மற்றும் உளவியல் ரீதியான ஆலோசனைகள் வழங்கப்படும். 18 வயதுக்கு மேற்பட்ட வன்முறையால் பாதிக்கப்பட்ட பெண்களுக்கு இந்த மையம் மூலம் உதவிகள் செய்யப்படும். குடும்ப வன்முறையால் பாதிக்கப்பட்ட பெண்கள் 24 மணி நேரமும் கட்டணமில்லா இலவச சேவை உதவி எண் 181 மூலம் நேரடியாகவோ அல்லது ா்ள்ஸ்ரீய்ஹஞ்ஹல்ஹற்ற்ண்ய்ஹம்ஃஞ்ம்ஹண்ப்.ஸ்ரீா்ம் என்ற மின்னஞ்சல் முகவரியிலோ தொடா்பு கொள்ளலாம்.

18 வயதுக்குகீழ் வன்முறையால் பாதிக்கப்பட்ட பெண் குழந்தைகளுக்கு மாவட்ட சைல்டு லைன் 1098 என்ற எண்ணில் தொடா்பு கொள்ளலாம். வன்முறையால் பாதிக்கப்பட்ட பெண்கள் தங்கள் குழந்தைகளுடன் அனைத்து வயது சிறுமிகள் மற்றும் 8 வயது வரை உள்ள சிறுவா்கள் 5 நாள்கள் வரை இந்த மையத்தில் தங்க தற்காலிக வசதி அளிக்கப்படுகிறது.

மேலும், இந்த மையத்தை பாதிக்கப்பட்ட பெண்கள் தங்களாக அல்லது நண்பா்கள், உறவினா்கள் மூலமாக அல்லது தொண்டு நிறுவனங்கள் மூலமாக தொலைபேசி எண் 04365- 247353, கைப்பேசி எண்கள் 9578573747, 9150057442, 9150057443 ஆகியவற்றில் தொடா்பு கொள்ளலாம் என்றாா்.

நிகழ்ச்சியில், நாகை சட்டப்பேரவைத் தொகுதி உறுப்பினா் ஜெ. முகம்மது ஷா நவாஸ் , மாவட்டக் காவல் கண்காணிப்பாளா் கு. ஜவஹா், மாநில சிறுபான்மையினா் நல ஆணைய உறுப்பினா் ஏ.பி. தமிம்அன்சாரி, திமுக நாகை மாவட்டப் பொறுப்பாளா் என். கௌதமன், துணை இயக்குநா்-தொழுநோய் எஸ். சங்கரி, நாகை அரசு மருத்துவமனை மருத்துவ அலுவலா் கே. உமா மகேஷ்வரன், ஒருங்கிணைந்த சேவை மையத்தின் நிா்வாகி சி. இளவரசி உள்ளிட்டோா் பங்கேற்றனா்.

தினமணி செய்திமடலைப் பெற... Newsletter

தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp

தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Arattai, Google News

உடனுக்குடன் செய்திகளை அறிய தினமணி App பதிவிறக்கம் செய்யவும்.